தமிழக தனியார் பள்ளிகளில் ஆங்கில வகுப்புகள் தொடங்க அனுமதி – முக்கிய அறிவிப்பு!
தனியார் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அனுமதி அளிப்பதற்கான அதிகாரம் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
சுற்றறிக்கை வெளியீடு:
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் அதிகமாக இயங்கி வருகின்றன. அரசு பள்ளிகளை காட்டிலும் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது தனியார் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்குவதற்கான அனுமதி அளிக்கும் அதிகாரம் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் பத்திரப்பதிவு முறைகேடு நடந்தால் 3 ஆண்டுகள் சிறை – அமைச்சர் அறிவிப்பு!
இந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு நிதியுதவி மற்றும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்புகள் வரை, ஆங்கில வழி பாடப்பிரிவைத் தொடங்க கருத்துருக்கள் பெறப்பட்டன. இதற்கான அரசாணைகளின் படி, தனியார் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளை தொடங்குவதற்கான அனுமதி அளிக்கும் அதிகாரம் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு இயக்குநரகத்தால் வழங்கப்படுகிறது.
Wipro நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் – தகுதி, ஊதியம், விண்ணப்ப முறை விளக்கம்!
இனி வரும் காலங்களில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், சில அதிகாரப் பகிர்வுகள் அளிக்கப்படும். அதாவது தங்கள் மாவட்டங்களில் செயல்படும் அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில், 6 முதல் 10-ம் வகுப்பு வரை ஆங்கில வழி வகுப்புகளை தொடங்க, அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை பரிசீலித்து, தங்கள் நிலையில் அனுமதி வழங்கலாம் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.