தமிழகத்தின் சில மாவட்டங்களில் கடைகள் திறக்க அனுமதி? மேற்கில் கடும் கட்டுப்பாடுகள்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் சற்று குறையத் தொடங்கியுள்ள நிலையில் ஊரடங்கில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஊரடங்கில் மாற்றம்:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் ஏற்படுத்தி வரும் பாதிப்புகளின் காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. முன்னதாக மே 23ம் தேதி வரையிலும் அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் மதியம் வரை திறக்கப்பட்டு ஊரடங்கு அமலில் இருந்தது. தொடர்ந்து மக்களின் அலட்சியத்தினால் மிக தீவிர நிலையில் கொரோனா பரவ தொடங்கியது.
TN Job “FB Group” Join Now
இதனால் மே 24ம் தேதி முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு தமிழகத்தில் அமலில் இருந்து வருகிறது. தொடர்ந்து 35,000 க்கும் அதிகமாக இருந்த பாதிப்பு நிலவரம், கடந்த சில நாட்களாக நன்கு குறையத் தொடங்கி உள்ளது. தற்போது 2,96,131 கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். மாநிலம் முழுவதும் இதுவரை 24,722 பேர் தொற்றினால் உயிரிழந்து உள்ளனர்.
இந்த ஆண்டில் மட்டும் 2.53 கோடி பேர் வேலையிழப்பு – CMIE அறிக்கை!
தற்போது ஜூன் 7 ம் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாகனங்களில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் மேலும் ஊரடங்கு ஒரு சில தளர்வுகளுடன் நீட்டிக்கட்டும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
எஸ்பிஐ (SBI) வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சேவை பாதிப்பு?
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களிலும் காலை 10 மணி வரை மக்கள் வெளியில் செல்லவும், அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் இயங்கவும் தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. தொற்று பாதிப்புகள் குறையாமல் உள்ள கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் தீவிர கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தொடர அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
Lock down innim podoga