எஸ்பிஐ (SBI) வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சேவை பாதிப்பு?

3
எஸ்பிஐ (SBI) வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - சேவை பாதிப்பு?
எஸ்பிஐ (SBI) வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - சேவை பாதிப்பு?
எஸ்பிஐ (SBI) வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சேவை பாதிப்பு?

எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வருகின்ற ஜூன் மாதம் 30ம் தேதிக்குள் தங்களது பான் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இல்லை என்றால் வங்கி சேவையில் பாதிப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது.

எஸ்பிஐ அறிவிப்பு:

வருமான வரித்துறையின் தனிநபர் வருமானம் குறித்த தகவலை அறிவதற்காக பான் கார்ட் என்னும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வாடிக்கையாளர்கள் எவரேனும் வங்கி கணக்கும் தொடங்க வேண்டும் எனில் அதற்கு பான் கார்ட் கட்டயமாக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மத்திய அரசு பல மாத காலமாகவே பான் கார்டினை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று மக்களை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதனை இணைக்கவில்லை எனில் அபராதம் விதிப்பதோடு பான் கார்டு முடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

ssc

தற்போது அந்த வகையில் எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் பான் கார்டினை வருகின்ற ஜூன் மாதம் 30ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும் இதனை செய்தால் மட்டுமே எளிய முறையில் வங்கி சேவை நடைபெறும் என்றும் தெரிவித்தது. மேலும் அவ்வாறு இணைக்கவில்லை எனில் பான் கார்டினை தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்றும் தெரிவித்தது. தற்போது ஆதார் மற்றும் பான் இணைப்பிற்கான எளிய வழிமுறை வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கருத்துகேட்பு – மின்னஞ்சல், தொடர்பு எண் அறிவிப்பு!

ஆதார் பான் இணைப்பு வழிமுறை:

  • இணையத்தில் incometaxindiaefiling.gov.in என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • வாடிக்கையாளர்கள் பான் அட்டை எண் தான் தங்களின் யூசர் ஐடியாக இருக்கும்
  • அதனை கொடுத்த பிறகு ஆன்லைனில் வாடிக்கையாளர்கள் தங்களின் பாஸ்வேர்ட் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்யவும்.
  • பிறகு ப்ரோபைல் செட்டிங் என்னும் ஆப்சனுக்குள் சென்று லிங் ஆதார் என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்
  • தங்களின் பான் கார்ட் தகவல்கள் அதில் இடம் பெற்றிருக்கும். அதனை சரிபார்த்த பிறகு தங்களின் ஆதார் எண்ணை பதிவு செய்து ‘லிங்க் நவ்’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
  • பிறகு ஆதாருடன் பான் இணைக்கப்பட்டதை உறுதி செய்யும் வகையில் செய்தி தங்களுக்கு வரும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. SBI Bank பணம் போடும் மக்கள் பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை இணைய ஒவ்வொரு ஆண்டும் SBI Bank சட்டம் மாற்று கொண்டு இருக்கிறது.இதனால் மக்கள் சிரமமாக உள்ளது.மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும்
    ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு எதுவும் தெரியாது.அந்த மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே இருப்பதால் மூன்று வேளை உணவு தேடுக்கின்றனர்.அப்படி இருக்க மக்கள் வாழ்க்கை பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை இணைய மக்கள் பணம் போடும் வங்கிகள் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்படும்.நடுத்தர மக்கள் வாழ்க்கை பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை தெரியாது.ஆனால் ரேசன் கார்டு மற்றும் தான் தெரியும்.அதில் இருக்கும் PHH,NPH அதுவே பொதுவாக மக்கள் வாழ்க்கை கண்டுபிடிக்கலாம்.

  2. If we want to have a corruption free administration, all citizens should pay their taxes and the first step is to have a PAN Card and all money transactions are done through bank. People who want to evade taxes give excuses like people are uneducated, people under poverty line etc. we have to come out of this mess now.

  3. இது போன்ற கட்டுபாடுகள் இல்லாத, மினிமம் பேலன்ஸ் கட்டணம் இல்லாத
    ஏழைகள், எளியவர்கள் சுலபமாக அவர்கள் எளிதாக பரிவர்த்தனைகள் மேற்கொள்ள தனியாக வங்கி கிளைகள் அ‌ல்லது தனி வங்கி இயங்க சட்டம் இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக ஏழைகளுக்கு. சதாரண அல்லது நடுத்தர மக்களுக்காக இயற்றும் சட்டம் ஏழைகளை மிகவும் பாதிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!