தமிழக தனியார் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளுக்கு அனுமதி – CEO க்களுக்கு அதிகாரம்!
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளைத் தொடங்குவதற்கான அனுமதி அளிக்கும் அதிகாரம் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
ஆங்கில வழி கல்வி :
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கல்வி துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அரசின் முயற்சியால் நடப்பு ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. மேலும் அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்கு தேவையான நல திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு – 1.23 கோடி ரூபாய் நோய் தடுப்பு பணிக்கு ஒதுக்கீடு!
இந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும், அரசு நிதியுதவி மற்றும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 6 முதல் 10 ம் வகுப்புகள் வரை, ஆங்கில வழிப் பாடப்பிரிவைத் தொடங்கக் கருத்துருக்கள் பெறப்பட்டன. இதனையடுத்து தனியார் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளை தொடங்குவதற்கான அனுமதி அளிக்கும் அதிகாரம் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு இயக்குநரகத்தால் வழங்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
சில அதிகாரப் பகிர்வுகள் அளிக்கப்படும். அதாவது, தங்கள் மாவட்டங்களில் செயல்படும் அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில், 6 முதல் 10-ம் வகுப்பு வரை ஆங்கில வழி வகுப்புகளைத் தொடங்க, அனைத்து நிபந்தனைகளும் சரியாக உள்ளதா என்பதைப் பரிசீலித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனுமதி வழங்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.