தமிழகத்தில் மக்களின் நலனுக்கு கேடு விளைவிக்கும் பொருள்களுக்கான விற்பனையை கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அமைச்சர் உறுதி:
தமிழக அரசு மாநிலம் முழுவதும் போதை பொருட்கள் விற்பனைக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. போதைப் பொருட்கள் வாயிலாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அதிக அளவு பாதிக்கும் நிலை உள்ளதால் போதைப் பொருட்கள் விற்பனைக்கு தடை விதித்து தடையை மீறி விற்பனை செய்பவர்களுக்கு கடமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
ரூ.7.50 லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்கிறீர்களா? உங்களுக்கான வருமான வரி!! முழு விவரம் இதோ!!
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தமிழகத்தில் அண்டை மாநிலங்களில் இருந்து போதைப் பொருட்கள் கடத்தி வருவது காவல்துறைக்கு மிகவும் பெரிய சவாலாக இருந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் குட்கா, பான்பராக் போன்ற போதை பொருட்கள் விற்பனைக்கு நிரந்தர தடை விதிக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.