பெரியார் பிறந்த தினமான செப்.17ம் தேதி ‘சமூக நீதி’ நாளாக கொண்டாடப்படும் – முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் செப்டம்பர் 17 ஆம் தேதி பெரியார் பிறந்தநாள் அன்று சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் இன்று பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
சமூக நீதி நாள்:
பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி அவர்கள் 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி பிறந்தார். சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாக கருதப்படும் திராவிடர் கழகத்தினை இவர் தோற்றுவித்துள்ளார். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, முற்பட்ட சாதியாக கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களை தாழ்வாக கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காக குரல் கொடுத்துள்ளார்.
தஞ்சையில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – அச்சத்தில் பெற்றோர்கள்!
இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதை கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூக பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவர். இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ. இராமசாமி என்ற பெயர்களாலும் தந்தை பெரியார், வைக்கம் வீரர் என்ற பட்டங்களாலும் அழைக்கப்படுகிறார். இவ்வாறு சிறப்புமிக்க பெரியாரின் புகழ் போற்றும் வகையில் அவரது பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதியை சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று பேரவையில் இன்று பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கணக்கெடுப்பு – பள்ளிக்கல்வித்துறை!
இது குறித்து சட்டப்பேரவையின் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், தந்தை பெரியாரின் செயல்கள், போராட்டங்கள் குறித்து பேச வேண்டுமென்றால் 10 நாள்கள் அவையை ஒத்திவைத்துவிட்டு பேச வேண்டும். இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ பெரியார் அளித்த அடித்தளமே காரணம். இனி ஒவ்வொரு ஆண்டும் பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும். யாரும் எழுத தயங்கியதை எழுதியவர்; யாரும் பேச தயங்கியதை பேசியவர் பெரியார். பெரியாரின் குருகுல பயிற்சிதான் திமுகவை உருவாக்கியது. சாதிய ஏற்றத்தாழ்வுகளை உதறித் தள்ளுவோம், பெண்களுக்கு சம உரிமை வழங்குவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.