தஞ்சையில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – அச்சத்தில் பெற்றோர்கள்!
தஞ்சை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
மாணவர்களுக்கு கொரோனா:
தமிழகத்தில் கொரோனா பரவும் அச்சம் காரணமாக கடந்த ஓராண்டு காலத்திற்கும் மேலாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. அதனால் வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. தற்போது தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை குறைந்துள்ளதால் மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு கடந்த 1ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதே போல் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள் & மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு முன்னெச்சரிக்கை பணிகளும் மேற்கொள்ளப்பட்டுதுள்ளது.
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கணக்கெடுப்பு – பள்ளிக்கல்வித்துறை!
இந்த நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது. கடலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிவகாசி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். மற்ற மாவட்டங்களை தொடர்ந்து தற்போது தஞ்சையில் மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் – மாவட்ட மேலாளர் உத்தரவு!
தஞ்சை அரசு கல்லூரியில் காய்ச்சல் அறிகுறியுடன் இருந்த தஞ்சை அரசு கல்லூரி மாணவி ஒருவருக்கும், திருப்பனந்தாள் அரசுப்பள்ளி மாணவி ஒருவருக்கும் கண்ணந்தங்குடி, பேராவூரணி பள்ளி மாணவர்கள் இரண்டு பேருக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அந்த மாணவர்கள் படித்த வகுப்பறையில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களிடையே அதிகரிக்கும் தொற்று பாதிப்பால் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் சூழல் உருவாகியுள்ளது.