தமிழகத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் – மாவட்ட மேலாளர் உத்தரவு!
விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திய சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என அம்மாவட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
தடுப்பூசி சான்றிதழ்
நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தியிருப்பது கட்டாயம் என அரசு அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் டாஸ்மாக் கடைகளின் ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கடைகளில் பணியாளர்களுக்கு ‘இந்த’ வசதி கட்டாயம் – சட்டத் திருத்தம் செய்ய முடிவு!
முன்னதாக தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளில் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. அதனால் டாஸ்மாக் கடைகளில் பணி புரிந்து வரும் ஊழியர்கள், மேற்பார்வையாளர்கள் உட்பட அனைவரும் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோயில்களில் மொட்டையடிக்க கட்டணமில்லை – இன்று முதல் அமல்!
இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட மேலாளர் பிறப்பித்த உத்தரவில், ‘விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். மேலும் சுகாதாரத்துறை குழுவினர் மற்றும் மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுவினர் டாஸ்மாக் கடைகளில் ஆய்வுக்கு வரும் போது தடுப்பூசிக்கான சான்றிதழை வைத்து கொண்டு பணியாற்ற வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.