தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கணக்கெடுப்பு – பள்ளிக்கல்வித்துறை!
அரசு பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் விவரங்களை பள்ளிக்கல்வி துறை கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. அதனை தொடர்ந்து இது குறித்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளது.
சுற்றறிக்கை:
நாடு முழுவதும் கொரோனா தாக்கத்தின் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது. நோய் தொற்றின் தாக்கம் குறைந்து வந்த நிலையில் செப்டம்பர் 1ம் தேதி முதல் தமிழகத்தில் 9,10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து அரசு பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் விவரங்களை பள்ளிக்கல்வித்துறை கணக்கெடுத்து வருகிறது.
தமிழகத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் – மாவட்ட மேலாளர் உத்தரவு!
இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியதாவது, 2021 – 22 ம் கல்வியாண்டிற்கான பணியாளர் நிர்ணயம் சார்பான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து எமிஸ் வலைதளத்தில் மாணவர்களின் சேர்க்கை மற்றும் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரம் முதலியன பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து தற்போது எமிஸ் வலைத்தளத்தில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் தொடர்பான விவரங்களை பதிவேற்றம் செய்ய சிறப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கூறப்பட்டிருந்தது.
தமிழக கடைகளில் பணியாளர்களுக்கு ‘இந்த’ வசதி கட்டாயம் – சட்டத் திருத்தம் செய்ய முடிவு!
.எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தங்கள் பகுதியில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஒப்பிட்டு எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு பதிவேற்றும் போது கடந்த ஆண்டுகளில் சரண் செய்யப்பட்டிருந்த பணியிடங்களை கணக்கில் கொள்ள கூடாது. இந்த பணிகளை உரிய வழிமுறைகளின்படி துரிதமாக முடிக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது.