தமிழக கடைகளில் பணியாளர்களுக்கு ‘இந்த’ வசதி கட்டாயம் – சட்டத் திருத்தம் செய்ய முடிவு!
தமிழ்நாட்டில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் உட்கார்ந்து கொண்டு வேலை செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் சி.வி.கணேசன் விளக்கம் அளித்துள்ளார்.
அமைச்சர் விளக்கம்:
நாடு முழுவதும் இயங்கி வரும் கடைகள் மற்றும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனை தொடர்ந்து அதில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பணிச்சுமை காரணமாக பணிபுரிபவர்கள் நின்று பணி செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்து தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் கூறுகையில், ”மாநிலத்தில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் அவர்களது வேலை நேரம் முழுவதுமாக நிற்க வைக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் கோயில்களில் மொட்டையடிக்க கட்டணமில்லை – இன்று முதல் அமல்!
அதன் விளைவாக பல வகையான உடல்நல கேடுகளுக்கு ஆளாகின்றனர். தங்களது வேலை நேரம் முழுவதும் தங்கள் பாதங்களிலேயே நிற்கும் வேலையாட்களின் நிலைமையை கருத்தில் கொண்டு கடைகள் மற்றும் நிறுவனங்களின் அனைத்து வேலை ஆட்களுக்கும் இருக்கை வசதி வழங்குதல் அவசியம் என கருதுகிறது. 04.09.2019 அன்று நடைபெற்ற மாநில தொழிலாளர் ஆலோசனை குழுவின் கூட்டத்தில் வேலையாட்களுக்கு இருக்கை வசதி வழங்கும் பொருட்கூறானது முன்வைக்கப்பட்டது.
கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் ஆதிக்கம் – அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
அது குழுவின் உறுப்பினர்களால் ஒத்த கருத்துடன் ஏற்கப்பட்டது. எனவே அரசானது மேற்சொன்ன நோக்கத்திற்காக 1947ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தினை தக்கவாறு திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது. இந்த சட்ட முன்வடிமானது மேற்சொன்ன முடிவிற்கு செயல் வடிவம் கொடுக்க விழைகிறது” என அவர் கூறியுள்ளார். இந்த முடிவு கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.