பாலிசிகளை கூடுதல் சலுகையுடன் புதுப்பிக்க கால அவகாசம் – எல்ஐசி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
கடைசி ப்ரீமியம் செலுத்த தவறிய தனது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகைகளுடன் கால அவகாசத்தை எல்ஐசி நிறுவனம் அறிவித்துள்ளது.
கூடுதல் சலுகைகள்:
நாட்டில் எல்ஐசி நிறுவனம் ஆயுள் காப்பீடு மற்றும் பயிர் காப்பீடு போன்ற பல்வேறு செயல்களுக்கு வாடிக்கையாளர்களிடம் பணத்தை பிரீமியமாக பெற்று, அவர்களின் மருத்துவம் மற்றும் இறப்பு சார்ந்த அவசர தேவையின் போது மொத்தமாக கொடுத்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக மக்கள் பல்வேறு பொருளாதார பிரச்சனையில் இருந்து வந்தனர். இதனால், அவர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய பாலிசிகளின் பிரீமியத் தொகையை செலுத்தாமல் இருந்து வந்தனர். இதனை அடுத்து, எல்ஐசி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகைகளை அறிவித்து ப்ரீமியம் செலுத்துவதற்கான காலத்தையும் அதிகரித்துள்ளது.
Ather 450X vs Ola vs Simple One Electric Scooter – மும்முனை போட்டி! சிறந்தது எது?
அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடைசி ப்ரீமியம் செலுத்தப்பட்டு ஐந்து வருடத்திற்கு மேல் ஆகாமல் உள்ள பாலிசிகளை மட்டுமே இந்த சலுகையை பயன்படுத்தி புதுப்பித்துக் கொள்ள முடியும். இதற்கான கால நேரம் அக்டோபர் 22-ம் தேதி வரை மட்டுமே உள்ளதாகவும் அறிவித்துள்ளது. இப்படி பாலிசிக்கான பிரீமியத்தை காலம் தவறி கட்டும் போது அபராதம் வசூலிக்கப்படும். இந்த அபாரதத்திலும் கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளன.
TN Job “FB Group” Join Now
வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய பிரீமியத் தொகை ஒரு லட்சத்திற்குள் இருந்தால், அவர்களுக்கு அபராதத்தில் இருந்து 20% அதாவது 2000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும். அதுபோக தொகை 1-3 லட்சத்திற்குள் இருந்தால், அதற்கு 25% தள்ளுபடியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதோடு சேர்த்து பாலிசிக்கான பிரீமியத் தொகை 3 லட்ச ரூபாய்க்கு மேல் இருந்தால் அவர்களின் அபராதத் தொகையில் இருந்து 30% அதாவது, 3000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அதிக விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் பொருத்திய பாலிசிகளுக்கு பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.