தினமும் ரூ.2 முதலீடு செய்தால் வருடம் ரூ.36,000 வரை ஓய்வூதியம் – PM SYM திட்டத்தின் அம்சங்கள்!

0
தினமும் ரூ.2 முதலீடு செய்தால் வருடம் ரூ.36,000 வரை ஓய்வூதியம் - PM SYM திட்டத்தின் அம்சங்கள்!
தினமும் ரூ.2 முதலீடு செய்தால் வருடம் ரூ.36,000 வரை ஓய்வூதியம் - PM SYM திட்டத்தின் அம்சங்கள்!
தினமும் ரூ.2 முதலீடு செய்தால் வருடம் ரூ.36,000 வரை ஓய்வூதியம் – PM SYM திட்டத்தின் அம்சங்கள்!

இந்தியாவில் அமைப்பு சாரா தொழிலாளர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் நோக்கில் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தினமும் ரூ.2 மட்டுமே முதலீடு செய்து வருடத்திற்கு ரூ.36 ஆயிரம் பெற முடியும்.

ஓய்வூதிய திட்டம்:

மத்திய அரசு மக்களின் நலன் கருதி இந்தியாவில் உள்ள அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் நோக்கில் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா என்ற ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதாவது இந்த ஓய்வூதிய திட்டம் நடைபாதை வியாபாரிகள், ரிக்ஷா மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே இணைந்து பயன்பெற முடியும்.

தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி – கூட்டுறவுத்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

அந்த வகையில் 18 வயது உடையவர்கள் இத்திட்டத்தில் இணைந்து மாதத்திற்கு ரூ.55 முதலீடு செய்வதன் மூலம் அடுத்த 18 வருடங்களில் ரூ.36,000 பெற முடியும். அதேபோல் 40 வயது உடையவர்கள் மாதந்தோறும் ரூ.200 முதலீடு செய்தால் மட்டுமே 60 வயதில் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்களாக கருதப்படுவீர்கள். அதனை தொடர்ந்து மாதம் ரூ.3000 ஓய்வூதியம் பெறலாம் அல்லது வருடத்திற்கு ரூ.36,000 கிடைக்கும். இந்த திட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் இணைய வங்கி கணக்கு மற்றும் ஆதார் அட்டை அவசியம் ஆகும். இத்திட்டம் தொடங்குவதற்கான முழு விபரங்களையும் பின்வருமாறு காணலாம்.

பாரதியின் 2 கண்ணம்மாவும் இணைந்து சீசன் 2 – வெளியான ப்ரோமோ! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா திட்டம் தொடங்குவதற்கான வழிமுறைகள்:

1. முதலில் இந்த ஓய்வூதிய திட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளமான maandhan.in/shramyogi க்கு செல்ல வேண்டும்.

2. பின்னர் Apply Now என்பதை கிளிக் செய்து, அதில் தோன்றும் இரண்டு ஆப்ஷன்களில் Self Enrollment என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

3. பின்னர் தோன்றும் பக்கத்தில் மொபைல் நம்பர், விண்ணப்பதாரரின் பெயர், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விபரங்களை குறிப்பிட்டு கேப்ட்சா குறியீட்டை பதிவு செய்ய வேண்டும்.

4. அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் உங்களது மொபைல் எண்ணுக்கு ஒரு OTP வரும். அதனை பதிவு செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்தால் உங்களது கணக்கு தொடங்கப்பட்டு விடும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!