தமிழக அரசு சார்பில் 1 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் – புதிய திட்டம் துவக்கம்!
தமிழகத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் புதிதாக 1,01,474 பேருக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். இத்தகைய திட்டம் மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.
அரசின் ஓய்வூதியம்:
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு மக்களுக்கு நலன் அளிக்கும் வகையில் பல்வேறு சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் இதுவரை பல்வேறு ஓய்வூதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் முதியோர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், திருமணம் ஆகாத ஏழைப்பெண்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உதவும் வகையில் புதிதாக ஓய்வூதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.
தமிழக அரசு ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் கவனத்திற்கு – விரைவில் கலந்தாய்வு!
அதன்படி தற்போது 8 சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் புதிதாக 1,01,474 பேருக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதனை முதலில் தொடங்கும் விதமாக தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் 10 பேருக்கு ஓய்வூதியம் வழங்கி தொடங்கி வைத்துள்ளார். இந்த விழாவில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் – 48,077
- இந்திராகாந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் – 1,359
- இந்திராகாந்தி தேசிய விதவைகள் ஓய்வூதிய திட்டம் – 4,346
- மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம் – 14,739
- ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதிய திட்டம் – 28,209
- உழவர் பாதுகாப்பு திட்டம் – 2,397
- ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ஓய்வூதிய திட்டம் – 1,732
- 50 வயதிற்கும் மேற்பட்ட திருமணமாகாத பெண்களுக்கு ஓய்வூதிய திட்டம் – 554
இலங்கை தமிழர்களுக்கு ஓய்வூதிய திட்டம் – 61