தமிழக அரசு ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் கவனத்திற்கு – விரைவில் கலந்தாய்வு!
தமிழகத்தில் டிசம்பர் 1 முதல் 15ம் தேதிக்குள் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் உட்பட அனைத்து வகை கலந்தாய்வுகளும் நடைபெறுவது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கலந்தாய்வு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் ஓராண்டுக்கும் மேலாக மூடப்பட்டிருந்தது. அதனால் அனைத்து வகுப்புகளுக்கும் பாடங்கள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆன்லைன் கற்றல் – கற்பித்தல் முறையில் மாணவர்களின் கல்வி நிலை கேள்விக் குறியாக உள்ளது என்று பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு முதல் கட்டமாக 9 – 12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றது. அடுத்த கட்டமாக தொடக்க மற்றும் நடுநிலை வகுப்புகளும் பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது முழுவதுமாக பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை – விவசாயிகள் மகிழ்ச்சி!
இந்த நிலையில் பள்ளிகளில் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் அரசின் செயல்பாடுகாளால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த 2 வருடங்களாக கொரோனா தாக்கம் தொடர்ந்ததால் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடைபெறவில்லை. அதனால் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை இந்த நிலையில் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் கற்பித்தல் பணி பள்ளி நிர்வாக பணிகளில் தொய்வு ஏற்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது.
சென்னையில் ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு விற்பனை – மொத்த வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு!
அதனால் விரைவில் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை எழுந்து வருகிறது. மேலும் பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் கலந்தாய்வுகளும் நடைபெறவில்லை. இதனால் ஏராளமான ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறாமலேயே ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். அதனால் எப்போது கலந்தாய்வு நடைபெறும் என்று அரசு பள்ளி ஆசிரியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் டிசம்பர் 1 முதல் 15ம் தேதிக்குள் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் உட்பட அனைத்து வகை கலந்தாய்வுகளும் நடைபெறுவது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.