ஓய்வூதியதாரர்களுக்கான ஹாப்பி நியூஸ் – பென்ஷன் 10% அதிகரிப்பு! மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு!
ஆந்திர மாநில அரசு ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதிய தொகையை 10 % உயர்த்தி உள்ளது. வரவிருக்கும் 2023 ஆம் ஆண்டு முதல் உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியம்
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஓய்வு பெற்ற தங்களது ஊழியர்களுக்கு பணிக்காலத்திற்கு பின் உதவும் வகையில் மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த ஓய்வூதிய திட்டம் பணபலன்களை அழிக்கவில்லை என்று ஊழியர்கள் கருத்து தெரிவித்தனர்.
Youtube பயனர்கள் கவனத்திற்கு.. 24 மணி நேரத்திற்கு கருத்து பதிவிட தடை – புதிய கட்டுப்பாடு அறிமுகம்!
Exams Daily Mobile App Download
அதனால் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திர மாநில அரசு ஓய்வூதிய தொகையை 10% உயர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி சமூக ஓய்வூதியம் ரூ. 2500 ல் இருந்து ரூ. 2,750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் வரும் 2023 ஜனவரி மாதத்தில் இருந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வூதிய உயர்வால் அரசுக்கு மாதம் ரூ.130.44 நிதி சுமை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்