ரயில் நிலையங்களில் உயிர் காக்கும் மருந்துகள் – டிக்கெட் பரிசோதகர்களுக்கு பயிற்சி!

0
ரயில் நிலையங்களில் உயிர் காக்கும் மருந்துகள் - டிக்கெட் பரிசோதகர்களுக்கு பயிற்சி!
ரயில் நிலையங்களில் உயிர் காக்கும் மருந்துகள் - டிக்கெட் பரிசோதகர்களுக்கு பயிற்சி!
ரயில் நிலையங்களில் உயிர் காக்கும் மருந்துகள் – டிக்கெட் பரிசோதகர்களுக்கு பயிற்சி!

இந்திய ரயில்வே அமைச்சகம் ரயில் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் ரயில் நிலையங்களில் உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்கள்:

இந்தியாவில் பெரும்பாலும் மக்கள் ரயில்களில் தான் பயணிக்கின்றனர். இன்றைக்கு நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் போக்குவரத்து ஏற்றதாக உள்ளது. ரயில்களில் உணவு, கழிப்பிடம், படுக்கை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளது. அத்துடன் பேருந்துகளை காட்டிலும் இதன் கட்டணம் மிகக் குறைவு என்பதால் மக்கள் ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். இந்த நிலையில் ரயில்வே அமைச்சகம் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் பயணிகள் தங்களுக்குள்ள குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க ஹெல்ப்லைன் எண்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் இரவு நேரங்களில் ரயில்களில் பயணிகள் எந்த இடையூறும் இல்லாமல் பயணிக்க ஏதுவாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரயில் நிலையங்களில் அவசர தேவைக்காக உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் போன்றவைகள் வைக்கப்பட்டுள்ளது.

Youtube பயனர்கள் கவனத்திற்கு.. 24 நேரத்திற்கு கருத்து பதிவிட தடை – புதிய கட்டுப்பாடு அறிமுகம்!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இந்த உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை டிக்கெட் பரிசோதகர்களுக்கு பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும் என்று ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது டிக்கெட் பரிசோதகர்களுக்கு அதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!