25 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் புக்கிங் – Paytm சலுகை!
பாரத் கேஸ் சிலிண்டர் வாங்குவோருக்கு 800 ரூபாய் கேஷ்பேக் சலுகையினை பேடிஎம் வழங்குகிறது. பேடிஎம் ஆப்பில் முதல் முறை கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்வோருக்கு 800 ரூபாய் திருப்பி தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேடிஎம் சலுகை:
சமையல் எரிவாயுவின் விலை கடந்த சில மாதங்களாக அதிகம் உயர்ந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் விலை ஒரு சிலிண்டருக்கு ரூ.100 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. சமையல் கேஸ் சிலிண்டரின் விலை உயர்வு இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டர் பயன்பாடு அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. தமிழகத்தில் 14 கிலோ கேஸ் சிலிண்டரின் விலை 825 ரூபாயாக உள்ளது.
சென்னை நகருக்குள் பயணிக்க இ-பாஸ் அவசியம் – முழு விவரங்கள் இதோ!
இந்நிலையில், ஏறக்குறைய இலவசமாகவே கேஸ் சிலிண்டர் பெற்றுக்கொள்ள பேடிஎம் ஒரு சலுகையை வழங்கியுள்ளது .இதன்படி, கேஸ் சிலிண்டர் வாங்குவோருக்கு 800 ரூபாய் கேஷ்பேக் சலுகையை பேடிஎம் வழங்குகிறது. பேடிஎம் ஆப்பில் முதல் முறை கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்வோருக்கு 800 ரூபாய் திருப்பித் தரப்படும். இச்சலுகைக்கான காலம் ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இம்மாத இறுதி வரை இந்த சலுகையை பெற்றுக்கொள்ளலாம். மேலும் பாரத் கேஸ் சிலிண்டரை பேடிஎம் மூலம் முன்பதிவு செய்பவர்கள் வெறும் 25 ரூபாயில் சிலிண்டர் பெறலாம் என பாரத் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
பேடிஎம் சலுகை பெறும் வழிமுறை:
- உங்கள் மொபைலில் Paytm பயன்பாட்டை (Paytm App) இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
- உங்கள் எரிவாயு நிறுவனத்துடன் சிலிண்டர் முன்பதிவு செய்ய வேண்டும்.
- நீங்கள் Paytm க்குச் சென்று மேலும் காண்பி என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- நீங்கள் சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கான விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
- நீங்கள் பாரத் கேஸ் என்பதை தேர்வு செய்ய வேண்டும். முன்பதிவு செய்வதற்கு முன், நீங்கள் விளம்பர குறியீட்டை உள்ளிட வேண்டும்,
- LPG ஐடி அல்லது உங்கள் கேஸ் சிலிண்டருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்னை பதிவிட வேண்டும்.
- QR கோட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பேடிஎம் சலுகையை பெறலாம்.