தமிழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறைகாவலர்களுக்கு ஊதிய உயர்வு – அரசாணை வெளியீடு!

0
தமிழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறைகாவலர்களுக்கு ஊதிய உயர்வு - அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறைகாவலர்களுக்கு ஊதிய உயர்வு - அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறைகாவலர்களுக்கு ஊதிய உயர்வு – அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறைகாவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்த்தப்பட்டு இருப்பதாக அரசாணை வெளியாகி இருக்கிறது.

ஊதியம் உயர்வு

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி சட்டப்பேரவையில் சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் துறையின் கீழ் புதிய அறிவிப்புகளை அமைச்சர் ரகுபதி வெளியிட்டார். அதில் சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் துறையில் பணிபுரியும் முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறைக் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் காவல்துறை ஆளுநர்களுக்கு இணையாக வழங்கப்படும் என தெரிவித்தார்.

CIPET நிறுவனத்தில் மாதம் ரூ.70,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

அதன் படி 200 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிட்ட நிலையில், இதர படியும் ரூ.800ல் இருந்து 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். இந்நிலையில் முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறைகாவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்த்தப்பட்டு இருப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ரூ.200ல் இருந்து ரூ.500ஆக உயர்த்தப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!