தமிழகத்தில் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் நேற்று முதல் காலவரையற்ற தொடர் போராட்டம் – பணி நிரந்தரமாக்கப்படுமா?
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் தங்களுக்கு பணி நிரந்தரமாகப்பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முதல் காலவரையற்ற போராட்டம் நடத்த உள்ளதாக ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார்.
சிறப்பாசிரியர்கள்
தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 12,000 மேற்பட்ட பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.10000 மட்டுமே தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக தங்களது பணி நிரந்தரமாக்கப்பட்ட வேண்டும் என பல்வேறு வகைகளில் அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
மேலும் திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் ஆட்சிப் பொறுப்பேற்றதும் பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு பணி நிரந்தரமாக்கப்படும் என அறிவித்திருந்தது. ஆனால் இந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர். அத்துடன் இந்த ஆண்டுக்கான பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையின் போது சிறப்பாசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
ஆனால் எந்தவித அறிவிப்பும் இடம் பெறாததால் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் தங்களுக்கு பணி நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று சென்னை டிஜிபி வளாகத்தில் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தங்களின் கோரிக்கையை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால் தங்களின் போராட்டம் தொடரும் என்றும் பகுதி நேர ஆசிரியர்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download