பொதுத்தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்கள் – பிரதமர் மோடி வழங்கிய அறிவுரைகள்!!
பரிக்சா பே சார்ச்சா நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி பொதுத்தேர்வுகளை துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.
பிரதமர் அறிவுரை:
பொதுத்தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு தேர்வு குறித்து ஏற்படும் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் பிரதமர் மோடி ‘பரிக்சா பே சார்ச்சா’ நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். இந்த நிகழ்ச்சி டெல்லியில் நேற்று (07-04-2021) நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக காணொளி வாயிலாக நடத்தப்பட்ட பரிக்சா பே சார்ச்சா நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களிலிருந்து பல மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தவிர வெளிநாடுகளிருந்தும் 91 மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு? சுகாதாரத்துறை விளக்கம்!!
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆசிரியர்களும், பெற்றோர்களும் நெருக்கடி கொடுப்பதாக கூறிய அவர், மாணவர்களுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாழ்க்கை என்பது நீண்ட பயணம். அதில் தேர்வுகள் என்பது ஒரு நிறுத்தம் மட்டுமே என கூறியுள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார் பிரதமர் மோடி.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்