தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு? சுகாதாரத்துறை விளக்கம்!!
தமிழகத்தில் கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொது முடக்கம்:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒவ்வொரு நாளும் நான்காயிரத்தை எட்டி வருகிறது. தினமும் நோய்த்தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் சில கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது முடக்கத்தை அறிவிக்கலாம் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி மீண்டுமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டால் எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதனை கருத்தில் கொண்டு சில கட்டுப்பாடுகள் மட்டும் விதிக்கலாம் என ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உச்சம் தொடும் கொரோனா – இன்று 3,986 பேருக்கு தொற்று!!
- அதன்படி அத்தியாவசிய பொருட்களின் விற்பனை மற்றும் சரக்கு வாகனங்களுக்கு தடை ஏற்படாது.
- சுற்றுலா தலங்ளுக்கு இ-பாஸ் கட்டாயம்.
- மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்துக்கு குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இயங்கும்.
- அரசு, தனியார் பள்ளிகள் இயங்காது. கடற்கரை, நீச்சல் குளம், கூட்ட அரங்குகளுக்கு தடை விதிக்கப்படலாம்.
- சென்னை விமான நிலையத்தில் ஒரு நாளைக்கு 50 விமானங்கள் மட்டுமே தரையிறங்க அனுமதி.
- மதம் சார்ந்த கூட்டங்கள், அரசியல் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படும்.
- ஓட்டல்கள், தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் 9 மணி இயங்கலாம்.
- ஷோரூம்கள், ஷாப்பிங் மால்கள் இயங்கலாம்.
- தியேட்டர்கள் இயங்காது. சினிமா படப்பிடிப்புகளில் 70 பேர் கலந்து கொள்ளலாம்.
- பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் இயங்கலாம்.
- மாவட்டத்துக்குள் பேருந்து சேவை இயக்கப்படும்.
- எந்தெந்த நிறுவனங்கள் இயங்கலாம், இயங்கக்கூடாது என்பதை அந்தந்த மாவட்ட ஆட்சியாளர் முடிவெடுத்து கொள்ளலாம்.
- பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்.
இந்த கட்டுப்பாடுகள் ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்