கண்ணன், ஐஸ்வர்யாவை சேர்த்து கொண்ட தனம் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் படப்பிடிப்பு தளத்தில் தனம், கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா மூவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் பிரிந்த குடும்பம் வரும் நாட்களில் மீண்டும் இணையும் என தெரிகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் தற்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் நகர்ந்து வருகிறது. இதில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா ஜோடி, வீட்டை விட்டு வெளியேறியவுடன் அடுத்து என்ன நடக்கும் என்பது பார்ப்பவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஐஸ்வர்யா, கஸ்தூரியின் வீட்டுக்கே சென்று அவரது வீட்டு சாவியை கேட்பதும், கண்ணனை அடிக்க வரும் பிரசாந்தை கதிர் தடுப்பதும் என புதிய கதைக்களம் கார சாரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
சூப்பர் மாடல் மீரா மிதுன் கேரளாவில் கைது – குற்றப்பிரிவு போலீசார் அதிரடி!
முன்னதாக கண்ணன் செய்த திருமணத்தை ஏற்க மறுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரையும் கண்டபடி திட்டி வீட்டை விட்டு அனுப்பியது. இந்த எபிசோடுகள் மட்டும் சுமார் 4 தினங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் மூர்த்தி மட்டும் ஒரு முழு எபிசோடிலும் பேசி, தனது வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம் பிரிந்து விட்டது எனவும் கண்ணன் இப்போதைக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் சேர மாட்டார் என்பது பலரது கணிப்பாக இருந்தது.
TN Job “FB Group” Join Now
ஆனால் இவை உண்மை இல்லை என தற்போது வெளியாகியுள்ள புகைப்படம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளது. அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் படப்பிடிப்பு தளத்தில் கண்ணன், ஐஸ்வர்யா, தனம் மூவரும் காரில் அமர்ந்து ஒன்றாக பயணிப்பது போல எடுத்துக் கொண்ட ஒரு சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனால் இந்த ‘ஆனந்தம்’ குடும்பம் வழக்கமான சிறிய சச்சரவுகளுக்கு பின்னர் மீண்டும் இணைவார்கள் என்று தெரிகிறது.