அம்மாவின் அஸ்தியை கரைக்க கண்ணனை புறக்கணிக்கும் அண்ணன்கள் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், அம்மாவின் அஸ்தியை எடுத்து வந்து மூர்த்தி ஜீவா, கதிர் இறுதி சடங்குகள் நடத்தும் போது கண்ணன் அங்கே வந்து நிற்கிறார். அனைவரும் அதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் மொட்டை அடித்து இறுதி சடங்கு செய்வதை பார்த்த மூர்த்தி ஜீவா கதிர் எதுவும் பேசாமல் இருக்கின்றனர். அங்கிருந்து அஸ்தியை எடுத்துக் கொண்டு செல்ல, அங்கே வீட்டில் இருப்பவர்கள் சாமி கும்புடுகின்றனர். அங்கே கண்ணன் வந்து நிற்க தனம், மீனா, முல்லை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். அனைவரும் வணங்கி விட்டு, மூர்த்தி வேறு யாராவது கும்பிட வேண்டுமா என கேட்கிறார்.
அப்போது சண்முகம் பின்னால் இருக்கும் கண்ணனை பார்த்து அழைத்து சாமி கும்பிட சொல்கிறார். கண்ணனை தடுக்க கஸ்தூரி வர, தனம் வேண்டாம் என சொல்கிறார். பின் சாம்பலை கரைக்க அனைவரும் செல்ல கண்ணனும் உடன் போகிறான். மூர்த்தி ஜீவா கதிர் மூவரும் செல்ல கண்ணன் பின்னால் ஓடி வருகிறான். கண்ணன் அவனையும் கூப்பிடுவார்களா என எதிர்பார்த்து நிற்க சண்முகம் பாவம் அவனை போக சொல்லுங்க என சொல்கிறார்.
இரண்டாவது குழந்தைக்காக கோவிலில் பரிகாரம் செய்யும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!
பின் கண்ணனை அழைக்காமல் மூவரும் அஸ்தியை கரைகின்றனர். அம்மா அஸ்தியை பார்த்து ஜீவா தாங்க முடியாமல் அழுகிறார். அம்மாவின் ஞாபகங்களை நினைத்து பார்க்கின்றனர். ஜீவா அழுது கொண்டே விழ செல்ல கண்ணன் பதறுகிறார். அப்போது கண்ணனனை பார்க்க, கண்ணன் இப்படி அனாதை போல நிற்கிறேன். நான் செய்த தவறுக்கு இந்த தண்டனையே போதும், இன்னும் என்னை ஒதுக்கி விடாதீங்க என்னையும் உங்களுடன் அழைத்து சொல்லுங்க என மனதில் நினைக்கிறார்.
ஜனார்த்தனன் நேரம் ஆகி விட்டது என வண்டியில் எற சொல்கிறார். அப்போது கண்ணனை கூப்பிடாமல் காரில் ஏறி சென்றுவிடுகின்றனர். பின் தனம் அத்தை சொன்னதை எல்லாம் நினைத்து பார்க்கிறார். இந்த குடும்பத்தில் எல்லாரும் சந்தோசமாக இருக்க வேண்டும் என சொல்கிறார். இப்போ எல்லாரும் வந்துருவாங்க சாப்பாடு தயாராக இருக்கிறது என சொல்கிறார். அப்போது தனம் சாவதற்கு முன்பாக எல்லாருக்கும் தெரியுமா என கேட்க, சில பேருக்கு தெரியும் என சொல்கிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து பாதியில் விலகிய லட்சுமி அம்மா – மனம் திறந்து பேட்டி!
உடனே தனம் அத்தை என்னிடம் இரவு முழுவதும் பேசினார்கள். உடனே மீனா அப்படி என்ன தான் பேசினார்கள் என கேட்க, நிறைய பேசினார்கள் என சொல்ல, எனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும், இந்த வீடு ஒற்றுமையாக இருக்க வேண்டும், கண்ணனை கை விடாதீங்க, இந்த வீட்டை பார்த்துக் கொள் என்ன சொன்னாங்க, அப்பவே என்னிடம் சொல்லிருக்கலாம். அவங்க சொல்லிருந்த ஹாஸ்பிடல் சென்று பார்த்திருக்கலாம் என சொல்லி அழுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.