கயலை ஒதுக்குவதாக ஜீவாவிடம் சொல்லி அழும் மீனா, தனத்தின் குழந்தையை பார்க்கும் கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
கயலை ஒதுக்குவதாக ஜீவாவிடம் சொல்லி அழும் மீனா, தனத்தின் குழந்தையை பார்க்கும் கண்ணன் - இன்றைய
கயலை ஒதுக்குவதாக ஜீவாவிடம் சொல்லி அழும் மீனா, தனத்தின் குழந்தையை பார்க்கும் கண்ணன் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
கயலை ஒதுக்குவதாக ஜீவாவிடம் சொல்லி அழும் மீனா, தனத்தின் குழந்தையை பார்க்கும் கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கயலை யாருமே கண்டுக்கவே இல்லை என சொல்லி மீனா அழுகிறார். பின் குழந்தை அழுவதை பார்த்து கண்ணன் வந்து நிற்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனா கயலை யாருமே கண்டுகொள்ளவில்லை என சொல்லி ஜீவாவிடம் வருத்தப்படுகிறார். அப்போது ஜீவா இரண்டுமே நம்ம குழந்தை தான் என சொல்ல, நானும் தனம் அண்ணி குழந்தையை வேற குழந்தையாக நினைக்கவேயில்லை. இருந்தாலும் எல்லாரும் கயலை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என சொல்லி அழுகிறார். உடனே ஜீவா அப்படி எதுவும் நடக்கவில்லை என சொல்ல மீனாவிற்கு ஆறுதல் சொல்கிறார்.

நீ வருத்தப்பட்டு சொல்வது எல்லாம் சரி தான் ஆனால் நீ இப்படி அழுவதை என்னால் பார்க்க முடியவில்லை என சொல்லி மீனாவை தூங்க சொல்கிறார்.இரவு குழந்தை அழுகும் சத்தம் கேட்டு கதிர் எந்திரிக்கிறார். அப்போது முல்லை சென்று பார்க்க, தனம் குழந்தை தான் அழுகிறது என சொல்கிறார். பின் குழந்தைகள் வந்ததும் வீடு முழுவதும் குழந்தைகள் சத்தமாகவே இருக்கிறது என சொல்ல, முல்லை உங்களுக்கும் குழந்தை ஆசை வந்துவிட்டதே என சொல்கிறார்.

இரண்டு குழந்தைகளுடன் போட்டோ எடுத்துக் கொள்ளும் கண்ணம்மா, சித்த மருத்துவரை சந்திக்கும் அஞ்சலி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

அதான் இந்த குழந்தைகள் இருக்கே அப்பறம் எதற்கு நமக்கு குழந்தை என கதிர் சொல்ல, எல்லாரும் 3 வருடம் ஆகிறது இன்னும் குழந்தை இல்லையா என என்னிடம் கேட்கிறார்கள் என முல்லை சொல்கிறார்.அப்போது கதிர் முல்லை குழந்தை பெற்றது போலவும் கதிர் குழந்தையை கொஞ்சுவது போல நினைத்து பார்க்கிறார். பின் இருவரும் சந்தோசமாக இருக்க,மறுநாள் குழந்தை அழும் சத்தம் கேட்கிறது. பின் பக்கம் தனத்தின் அம்மா குளிக்க வைக்க, கண்ணன் என்ன குழந்தை சத்தம் கேட்கிறது என பின் பக்கம் சென்று பார்க்கிறார்.

அங்கே கஸ்தூரி குழந்தையை குளிக்கவைக்க, முல்லை பார்த்து பார்த்து என பயப்படுகிறார். அப்போது தனத்தின் அம்மா பெத்தவளே ஒன்றும் சொல்லவில்லை இவ வேற என சொல்ல, கண்ணன் பின் பக்கம் நிற்பதை முல்லை பார்த்து தனத்திடம் சொல்கிறார். அப்போது தனமும் பார்த்து குழந்தையை இன்னும் சிறிது நேரம் குளிக்க வைங்க என சொல்கிறார். பின் கஸ்தூரி போதும் என சொல்ல, கண்ணன் நான் குழந்தையை பார்த்துவிட்டேன் என சொல்கிறார்.

பாரதி & வெண்பாவை சீண்டும் கண்ணம்மா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்தடுத்த எபிசோடுகள்!

அதை கேட்டதும் தனம் சந்தோசமாக சிரிக்கிறார். பின் கட்டிட வேலை நடக்கும் இடத்தில் கதிர் அனைத்து வேலைகளையும் செய்கிறார். அப்போது முல்லை போதும் வேலை செய்தது என கூப்பிட்டுக் கொண்டே இருக்க, சுத்தி வேலை செய்யும் அக்கா அவரை கிண்டல் செய்கிறார். பின் பேங்க்கில் இருந்து ஏடிஎம் வைக்க இடம் வேண்டும் என கேட்டு வருகிறார்கள். அண்ணனிடம் கேட்டுவிட்டு முடிவு செய்ய இருப்பதாக கதிர் சொல்ல, முல்லை எல்லாம் நான் வந்த நேரம் தான் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!