ஆண் குழந்தையை பெற்றெடுத்த தனம், சந்தோஷத்தில் குடும்பத்தினர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
ஆண் குழந்தையை பெற்றெடுத்த தனம், சந்தோஷத்தில் குடும்பத்தினர் - இன்றைய
ஆண் குழந்தையை பெற்றெடுத்த தனம், சந்தோஷத்தில் குடும்பத்தினர் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
ஆண் குழந்தையை பெற்றெடுத்த தனம், சந்தோஷத்தில் குடும்பத்தினர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் மூர்த்திக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதை பார்த்து குடும்பத்தினர் அனைவரும் சந்தோசமாக இருக்கின்றனர். பின் கண்ணன் குழந்தையை பார்க்காமல் வீட்டிற்கு கிளம்பிவிடுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் பிரசவ வலியில் துடிக்க, அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என நர்ஸ் சொல்கிறார். அதை கேட்டு அனைவரும் சந்தோசப்படுகின்றனர். பின் அனைவரும் குழந்தையை பார்க்க வர கண்ணன் மற்றும் குழந்தையை பார்க்காமல் வெளியே நிற்கிறார். அனைவரும் குழந்தையை பார்த்து மகிழ்ச்சியில் தூக்கி கொஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். பின் குழந்தையை தனத்தின் அம்மா நான் தான் உன்னுடைய பாட்டி என சொல்லி கொஞ்சுகிறார்.

கண்ணன் நீண்ட நேரம் வெளியே நின்றுவிட்டு பின் கூப்பிடவில்லை என நினைத்து அங்கிருந்து கிளம்புகிறான். அப்போது கதிர் கண்ணனை நினைத்து வெளியே வந்து பார்க்க அவன் கிளம்பிவிடுகிறான். அதன் பின் தனம் உள்ளே வந்து கண்ணனை தேட கதிர் கிளம்பிவிட்டதை சொல்கிறார். பின் ஜெகாவிற்கு போன் செய்து முல்லையை சொல்ல சொல்கிறார் தனத்தின் அம்மா. பின் முல்லை போன் செய்ய ஜெகாவும் சந்தோஷத்தில் கிளம்பி வருகிறார்.

ஹேமா, லட்சுமியை கோவிலுக்கு அழைத்து செல்லும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

அவரும் கஸ்தூரியும் வந்து குழந்தையை வந்து தூக்கி கொஞ்சுகிறார்கள். ஜெகா மருமகனே உன்னை பார்க்க 15 வருடம் காக்க வைத்துவிட்டார்கள் என சொல்லி கொஞ்சுகிறார். பின் கஸ்தூரி பொம்பளை பிள்ளை பெற்று கொடுத்தால் என் மகனுக்கு கல்யாணம் செய்து வைப்பேன் இப்படி என்னை ஏமாற்றிவிட்டாய் என சொல்கிறார். உடனே தனத்தின் அம்மா இரண்டாவது பெற்று கொடுப்பாள் என சொல்ல தனம் என்னால் முடியாது என சொல்கிறார்.

பின் அனைவரும் மருத்துவமனையில் இருக்க, தனம் கண்ணன் பற்றி முல்லையிடம் சொல்கிறார். அவன் தான் என்னை அழைத்து கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தான். அவன் இப்போது சின்ன பையன் போல இல்லை நல்ல பக்குவமாக இருக்கிறான். இவன் இனிமேல் வளர்ந்து தான் என்னை அம்மா என்று அழைப்பான் ஆனால் என்னை திருமணம் ஆன முதலில் கூட அம்மா என்று கண்ணன் தான் அழைத்தான் அண்ணி என கூப்பிட ரொம்ப நாள் ஆனாது. அத்தையை அவன் பாட்டி என கூப்பிடுவான் என சொல்லி சந்தோசப்படுகிறார்.

ஒரு வாரத்தில் 6 நாட்கள் வங்கிகள் விடுமுறை – RBI பட்டியல்! வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

பின் அவரை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து செல்ல, வீட்டில் முல்லை அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறார். வீட்டை துடைத்து கொண்டிருக்க முதலில் கஸ்தூரி விழ பார்க்கிறார். அதன் பின் மீனா விழ என்ன இப்படி தண்ணியாக இருக்கிறது என குறை சொல்கிறார். அப்படி எல்லாம் இல்லை என முல்லை சொல்ல, அங்கே கதிர் வந்து வழுக்கி விழுகிறார். உடனே கதிரை முல்லை பிடிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!