தனது முடிவில் பிடிவாதமாக இருக்கும் கதிர், மீனா அப்பாவிடம் பணம் வாங்க மறுக்கும் ஜீவா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லையின் அம்மா அப்பா மூர்த்தியை பார்க்க மருத்துவமனைக்கு வருகின்றனர். அங்கே கதிர் தனியாக நிற்பதை பார்த்து வருத்தப்படுகின்றனர். பின் ஜீவாவிடம் மீனாவின் அப்பா பில் கட்டுகிறேன் என சொல்ல ஆனால் ஜீவா அதை வாங்க மறுக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கஸ்தூரியிடம் மீனா கதிர் வந்து என்ன சொன்னார் என கேட்க கதிர் வந்து மூர்த்தியை நினைத்து அழுதார். எல்லாத்துக்கும் நான் தான் காரணம் என சொல்ல அதை கேட்டு தனம் நீ வீட்டிற்கு வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என சொன்னதாக சொல்கிறார். ஆனால் கதிர் நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன் என சொல்லிவிட்டார். உடனே தனம் வெளியே போக சொல்லிவிட்டாள் இப்படி சொல்வாள் என நினைக்கவே இல்லை என சொல்ல, எல்லாத்துக்கும் நீ தான காரணம் என ஐஸ்வர்யா சொல்கிறார்.
நான் என்ன காரணம் இப்போது மருத்துவமனையில் கூட சண்டை வர பார்த்தது, மீனாவின் அப்பா தனத்தின் அம்மா சொல்லி கூட கதிர் வராமல் இருந்ததால் சண்டை வர பார்த்தது ஆனால் எல்லாரும் அமைதியாக இருந்துவிட்டார்கள் என சொல்கிறார். மறுபக்கம் முல்லையின் அம்மா அப்பா மருத்துவமனைக்கு வருகின்றனர். அப்போது கதிர் வெளியே நின்று கொண்டிருக்கிறார். ஏன் எங்களிடம் சொல்லவில்லை என கேட்க இரவு நேரத்தில் சொல்லி உங்களை கஷ்டப்படுத்த வேண்டாம் என நினைத்தேன் என கதிர் சொல்கிறார்.
TN Job “FB Group” Join Now
பின் நீங்க மூர்த்தியை பார்த்தீங்களா என கேட்க அவர்கள் எல்லாரும் பார்த்துவிட்டார்கள் நன்றாக இருக்கிறார் என கதிர் சொல்கிறார். முல்லை அப்பா அதை நினைத்து வருத்தப்பட முல்லை அம்மா மீண்டும் சண்டை போடுகிறார். கொஞ்சம் அமைதியாக இரு என சொல்லி முல்லை அப்பா கூட்டி செல்கிறார்.உள்ளே சென்று மூர்த்தியை பார்க்க இப்படி எல்லாம் நடக்கும் என நான் நினைக்கவில்லை என சொல்கிறார். பின் மூர்த்தி இப்போது பரவாயில்லை என சொல்ல தனத்திடம் முல்லையும் கதிரும் இரவு ரோட்டில் நடந்து சென்றார்கள் அவர்களிடம் சொல்லி இப்போது எங்க வீட்டில் தங்க வைத்திருப்பதாக சொல்கிறார்.
பாரதியிடம் விவாகரத்து வேண்டாம் என கெஞ்சிய ஹேமா, மனம் இறங்கிய பாரதி – இன்றைய எபிசோட்!
மறுபக்கம் கண்ணன் ஜீவா வெளியே இருக்க ஜெகாவிடம் தனத்தின் அம்மாவை வீட்டிற்கு கூட்டிக் கொண்டு போக சொல்கிறார். அப்போது கண்ணன் மூர்த்திக்கு ஜூஸ் வாங்க வெளியே வருகிறார். அப்போது கதிர் ஜூஸ் வாங்கி கொடுக்க கண்ணன் ஏன் இப்படி எல்லாம் இருக்கிறாய் என கேட்கிறார். நீ வீட்டிற்கு வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என கண்ணன் சொல்ல, என்னால் அண்ணனும் அண்ணியும் கஷ்டப்பட்டது போதும் என் கதிர் சொல்கிறார். அவர் தன்னுடைய முடிவில் பிடிவாதமாக இருக்கிறார். பின் ஜீவா பணம் கட்ட காத்திருக்க மீனாவின் அப்பா வந்து நான் பணம் கட்டுகிறேன் என சொல்கிறார். ஆனால் ஜீவா வேண்டாம் என சொல்ல மீனாவின் அப்பா அதை பார்த்து கோவப்படுகிறார்.