மூர்த்தி ஆப்ரேஷனிற்கு பணம் கொடுத்த மீனாவின் அப்பா, கதிருக்கு தகவல் சொன்ன கண்ணா – இன்றைய எபிசோட்!

0
மூர்த்தி ஆப்ரேஷனிற்கு பணம் கொடுத்த மீனாவின் அப்பா, கதிருக்கு தகவல் சொன்ன கண்ணா - இன்றைய எபிசோட்!
மூர்த்தி ஆப்ரேஷனிற்கு பணம் கொடுத்த மீனாவின் அப்பா, கதிருக்கு தகவல் சொன்ன கண்ணா - இன்றைய எபிசோட்!
மூர்த்தி ஆப்ரேஷனிற்கு பணம் கொடுத்த மீனாவின் அப்பா, கதிருக்கு தகவல் சொன்ன கண்ணா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மூர்த்திக்கு உடனே ஆப்ரேசன் செய்ய வேண்டும் என டாக்டர் சொன்னதால் ஜீவா பல இடங்களில் பணம் கேட்கிறார். ஆனால் அவர்கள் இப்போவே கிடைக்காது என சொல்கின்றனர். பின் மீனா சொன்னதை கேட்டு அவருடைய அம்மா அப்பா மருத்துவமனைக்கு வர ஜீவா வேண்டாம் என சொல்லியும் கேட்காமல் பணம் கொடுக்கிறார். பின் கதிருக்கு கண்ணன் தகவல் சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மூர்த்திக்கு உடனே ஆப்ரேசன் செய்ய வேண்டும் என டாக்டர் சொல்கிறார். அதனால் ஜீவா பல இடங்களில் பணம் கேட்கிறார். ஒருவரிடம் பணம் கேட்க இப்பவே கிடைக்காது என சொல்கிறார் ஒரு 3 நாள் கழித்து வாங்கி கொள்ளுங்கள் என சொல்ல ஆனால் ஜீவா இப்பவே ஆப்ரேசன் செய்ய வேண்டும் என சொல்லி இருப்பதாக சொல்கிறார். அதை கேட்டு அவர் இப்போ பணம் இல்லை என சொல்கிறார். ஜீவா எப்படியாவது பணம் வேண்டும் எவ்வளவு வட்டி இருந்தாலும் கொடுப்பேன் என சொல்கிறார்

TN Job “FB  Group” Join Now

ஆனால் ஜீவா இப்பவே வேண்டும் என சொல்ல அவர் இப்போதைக்கு இல்லை என சொல்கிறார். தனம் ஜீவா என்ன ஆச்சு என கேட்க தெரிந்தவர்களிடம் கேட்டு இருக்கிறேன் என சொல்கிறார். தனம் கண்ணனை வீட்டிற்கு சென்று நகை இருக்கும் அதை விற்று அல்லது வைத்து பணம் கொண்டு வா என சொல்கிறார். ஜீவா அதெல்லாம் வேண்டாம் என ஜீவா சொல்கிறார். ஏற்கனவே வளையலை கொடுத்து தான் இவ்வளவு பிரச்சனை என ஜீவா சொல்கிறார். இந்த நேரத்தில் கடை எதுவும் திறந்திருக்காது என சொல்ல தனம் இப்போ என்ன செய்வது என கேட்கிறார்.

பின் ஜீவா நான் சொன்னது போல பணம் ஏற்பாடு செய்கிறேன் என சொல்கிறார். பின் ஜீவா ஒருவருக்கு போன் செய்து பணம் கேட்க அப்போது அவர் வெள்ளிக் கிழமை என்பதால் நாளை காலை பணம் கொடுக்கிறேன் என சொல்கிறார். அதை கேட்டு ஜீவா வருத்தத்தில் இருக்க அப்போது மீனாவின் அப்பா அம்மா வருகின்றனர். அவர்கள் மீனா சொல்லி தான் எங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கு என ஜீவாவிடம் சொல்ல இப்போது மூர்த்தி எப்படி இருக்கிறார் என கேட்கிறார்.

ஆப்ரேசன் செய்ய வேண்டும் என டாக்டர் சொல்லி இருக்கிறார். பணத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன் என சொல்ல, எனக்கு செய்தது போல தான பணம் வேண்டும் என்றால் என்னிடம் கேட்டிருக்கலாமே என மீனாவின் அப்பா சொல்கிறார். நடந்தது எல்லாம் போதும் என ஜீவா சொல்ல நடந்தது எதோ நடந்துவிட்டது இப்போது மூர்த்தி உயிர் தான் முக்கியம் என மீனாவின் அப்பா சொல்கிறார். என் அண்ணனிற்கு எப்படியாவது ஏற்பாடு செய்து பணம் கொடுத்துவிடுவேன் நீங்க தர வேண்டாம் என ஜீவா சொல்ல, மீனாவின் அம்மா நடந்தது நடந்துவிட்டது அதனால் சொந்தம் இல்லை என ஆகிவிடுமா என கேட்க மீனா அப்பா வெளியே செல்கிறார்.

ஷர்மிளா ஏற்பாட்டில் நடந்த வெண்பா ரோஹித் திருமண நிகழ்ச்சி, சந்தோஷமாக வந்த கண்ணம்மா பாரதி – இன்றைய எபிசோட்!

அங்கே மூர்த்திக்கு எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என கேட்டு பணம் கட்டிவிடுகிறார். பின் ஜீவா எனக்கு நீங்க பணம் கொடுக்க வேண்டாம் எவ்வளவு கஷ்டப்பட்டு நான் பணத்தை ஏற்பாடு செய்துவிடுவேன் என சொல்ல மீனாவின் அப்பா பணம் கட்டியாச்சு என சொல்கிறார். ஜீவா ஏன் இப்படி எல்லாம் செய்தீர்கள் என கேட்க இந்த பணத்தை வட்டி உடன் நான் கொடுத்துவிடுவேன் என சொல்கிறார். பின் உள்ளே சென்று தனம் என்ன ஆனது என கேட்க மீனாவின் அப்பா நான் சொல்வதை கேட்காமல் பணம் கட்டி விட்டார் என சொல்கிறார். நான் வட்டி உடன் கொடுத்துவிடுவேன் என ஜீவா உறுதியாக சொல்கிறார்.

பின் தனம் கண்ணனை கதிரிடம் தகவல் சொல்ல சொல்கிறார். மீனாவின் அப்பா அம்மா அதை பார்த்துவிட்டு என்ன பேசுகிறார்கள் என கேட்க கதிருக்கு தகவல் சொல்ல சொல்கிறார்கள் என மீனாவின் அம்மா சொல்ல, அவனால் தான் இவ்வளவு பிரச்சனையும் இப்போது எதற்கு அவர்களை வர சொல்கிறார்கள். அவர்கள் வந்தால் நம்ம பெண்ணிற்கு தான் பிரச்சனை என சொல்ல மீனா அம்மா இப்போ இதெல்லாம் வேண்டாம் பேசாமல் இருங்க என சொல்கிறார். பின் கண்ணன் போன் செய்ய ஆனால் ஜீவா போனை எடுக்கவில்லை

முல்லை யார் என கேட்க கதிர் கண்ணன் தான் போன் செய்கிறான் என சொல்கிறார். பின் தனத்திடம் கண்ணன் போனை எடுக்கவில்லை என சொல்ல நாம வர சொல்வோம் என நினைத்துவிட்டான் போல என சொல்லி ஜீவாவை போன் செய்ய சொல்கிறார். பின் ஜீவா நம்பரில் போன் வர முல்லை எடுக்க சொல்கிறார். கதிர் போனை எடுக்க கண்ணன் அழுது கொண்டே பேசுகிறார். அப்போது கதிர் என்ன ஆச்சு என கேட்க நீங்க சென்ற பின் அண்ணன் யாரிடமும் பேசவே இல்லை.அதன் பின் அண்ணனிற்கு நெஞ்சு வலி வந்துவிட்டது என சொல்கிறார்.

கதிர் அதை கேட்டு அதிர்ச்சி அடைய அண்ணனை மருத்துவமனைக்கு கொண்டு வந்திருக்கோம் என கண்ணன் சொல்கிறார். கதிர் முல்லையிடம் விவரத்தை சொல்ல எல்லாம் என்னால் தான் என்னுடைய முடிவால் தான் என கதிர் சொல்கிறார். அதை கேட்டு முல்லை ஆறுதல் சொல்ல இருவரும் கிளம்பி செல்கின்றனர். அப்போது பார்வதி பார்த்துவிட என்ன ஆனது என கேட்கிறார். வீடு வரை சென்றுவிட்டு வருகிறேன் என சொல்ல பார்வதி இது என்ன வந்துவிட்டு அங்கே போகிறார்கள் என கேட்கிறார். அங்கே போன் செய்து என்ன விவரம் என கேட்க சொல்லி பார்வதி சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!