ஷர்மிளா ஏற்பாட்டில் நடந்த வெண்பா ரோஹித் திருமண நிகழ்ச்சி, சந்தோஷமாக வந்த கண்ணம்மா பாரதி – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் வெண்பாவின் அம்மா ஷர்மிளா நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கின்றனர். அங்கே கண்ணம்மா பாரதி சௌந்தர்யா குடும்பம் வருவதை பார்த்து வெண்பா அதிர்ச்சி அடைகிறார். பின் ரோஹித் தான் என் மகளை திருமணம் செய்ய இருக்கும் மாப்பிள்ளை என அனைவரின் முன்னிலையில் ஷர்மிளா சொல்கிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் ஷர்மிளா எல்லாரையும் அழைத்து நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அப்போது வெண்பாவும் சாந்தியும் இது என்ன நிகழ்ச்சி என தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர். பின் கண்ணம்மா வர வெண்பா சாந்தி அவரை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இவள் எதற்கு இங்கே வருகிறாள் என குழப்பத்தில் இருக்க கண்ணம்மா வெண்பாவிடம் வந்து நீ தான் புது பொண்ணு என்ன இங்கே நிற்கிறாய் மாடியில் சென்று ஒரு ரூமில் இருக்கலாம் என சொல்கிறார்.
TN Job “FB Group” Join Now
உன்னை யாரு இங்கே வர சொன்னா என வெண்பா கேட்க ஊரில் யாராவது நிகழ்ச்சி வைத்தால் முதலில் வந்துருவாயா என கேட்கிறார். அப்போது கண்ணம்மா நான் நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக வர வேண்டும் என தம்பி ரோஹித் தம்பி தான் என்னை ஆசையாக கூப்பிட்டார் என சொல்கிறார். அப்போது கண்ணம்மா தம்பி மட்டுமல்ல ஆன்டி தான் என்னை வர சொன்னார் என சொல்ல எந்த ஆன்டி என வெண்பா கேட்கிறார். அப்போது ஷர்மிளா வந்து கண்ணம்மாவை பார்த்து வந்ததற்கு மிகவும் சந்தோசம் என சொல்கிறார்.
அப்போது வெண்பா என்ன இவளை போய் கட்டி பிடிக்கிறீர்கள் என கேட்க இவளுக்கு என்ன ஜம்முனு இருக்கிறாள் என ஷர்மிளா சொல்கிறார். பின் வெண்பா கடுப்பில் இருக்க சௌந்தர்யா வேணு அகில் குடும்பத்துடன் வருகிறார்கள் அவர்களை பார்த்து வெண்பா கடுப்பாக அருகில் வந்த சௌந்தர்யா வெண்பாவை பார்த்து எல்லாருக்கும் திருமணம் ஆகிவிட்டது உனக்கு மட்டும் எதுவும் ஆகவில்லை என நினைத்தேன் நல்ல வேளை இப்பவாவது உனக்கு திருமணம் நடக்கிறது என சொல்கிறார்.
அகில் எனக்கு இப்போது தான் நிம்மதியாக இருக்கிறது என சொல்ல வெண்பா அதை பார்த்து கோவப்படுகிறார். அப்போது ஷர்மிளா வந்து நீங்க வந்ததற்கு மிகவும் சந்தோசம் என சொல்கிறார். வெண்பாவின் திருமணம் நடக்க இருக்கிறது நாங்க முன்னாடி இருந்து நடத்த வேண்டும் அதனால் தான் நாங்க குடும்பத்துடன் வந்தோம் என சொல்கிறார். பின் அகிலனை ஷர்மிளாவிற்கு சௌந்தர்யா அறிமுகம் செய்து வைக்கிறார். பின் அஞ்சலி வரவில்லையா என கேட்க அவர் வரவில்லை என சொல்கிறார்.
தமிழக பொதுமக்களின் கவனத்திற்கு – காவல்துறையின் முக்கிய அறிவுறுத்தல்!
வெண்பா எல்லாரும் என்னை வெறுப்பேத்துகிறார்களா என நினைத்து கடுப்பில் இருக்கிறார். பின் நிகழ்ச்சி தொடங்க ஷர்மிளா நீங்க எல்லாரும் வந்ததை நினைத்து மிகவும் சந்தோசம் என சொல்கிறார். இப்போ நான் உங்க எல்லாருக்கும் ஒருத்தவரை அறிமுகம் செய்து வைக்க போகிறேன் என சொல்லி வெண்பாவை மேடையில் வைத்து கொண்டு கையை காட்டுகிறார். அந்த நேரம் பாரதி வர எல்லாரும் பாரதி தான் மாப்பிள்ளை என நினைத்துக் கொள்கிறார்கள் அதை பார்த்து வெண்பா கை தட்டுகிறார்.
ஷர்மிளா நான் சொன்னது இவர் இல்லை யாரும் தவறாக நினைக்காதீர்கள் என சொல்ல பின் பாடல் ஒலிக்க சாரதி வருகிறார். சாரதி நடனம் ஆடி கொண்டே வர அனைவரும் பார்த்து சந்தோசப்படுகின்றனர்.இவரை பார்த்ததும் ஹீரோ மாதிரி இருக்கிறதா என கேட்கிறார். புது படத்திற்காக நான் கூப்பிட்டதாக நினைக்க வேண்டாம் என சொல்கிறார். இவருடைய பெயர் ரோஹித் சாரதி என சொல்கிறார். இவர் தான் என் மகளை திருமணம் செய்ய போகிற மாப்பிள்ளை என சொல்கிறார். அனைவரும் அதை கேட்டு சந்தோசப்பட ஆனால் வெண்பா கோபப்படுகிறார். இது திருமணம் குறித்து தெரிவிக்க இருக்கும் நிகழ்ச்சி என சொல்கிறார்.
நான் இதை சிம்பிளாக நடத்தி இருக்கிறேன். நான் அடுத்த வாரம் வெளிநாட்டிற்கு செல்கிறேன் அதனால் தான் இப்பவே இந்த நிகழ்ச்சியை நடத்துகிறேன் என சொல்லி ரோஹித் பேச தொடங்குகிறார். இந்த உலகத்துலயே நான் தான் மிகவும் சந்தோஷமான மனிதர் என ரோஹித் சொல்கிறார். அந்த அளவிற்கு சந்தோஷத்தில் நான் பறந்து கொண்டிருக்கிறேன் என சொல்கிறார். பின் கண்ணம்மா அக்கா நான் கூப்பிட்டதும் வந்ததற்கு நன்றி என சொல்கிறார். பின் பாரதி நீங்களும் வந்ததற்கு நன்றி என சொல்கிறார்.