முல்லையை மருத்துவமனைக்கு போக சொல்லும் தனம், மூர்த்தியிடம் வேலை கேட்கும் ஐஸ்வர்யா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
முல்லையை மருத்துவமனைக்கு போக சொல்லும் தனம், மூர்த்தியிடம் வேலை கேட்கும் ஐஸ்வர்யா - இன்றைய
முல்லையை மருத்துவமனைக்கு போக சொல்லும் தனம், மூர்த்தியிடம் வேலை கேட்கும் ஐஸ்வர்யா - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
முல்லையை மருத்துவமனைக்கு போக சொல்லும் தனம், மூர்த்தியிடம் வேலை கேட்கும் ஐஸ்வர்யா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை எல்லாரும் குழந்தை இல்லை என கேட்கிறார்கள் அதனால் எனக்கு வருத்தமாக இருக்கிறது என சொல்லி அழுகிறார். பின் தனம் மருத்துவமனைக்கு போக சொல்கிறார். மறுபக்கம் ஐஸ்வர்யா கடையில் எதாவது வேலை இருக்கிறதா என கேட்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை எங்கே போனாலும் குழந்தை இல்லையா என கேட்கிறார்கள். வாசலில் கோலம் போட போனால் கூட பக்கத்து வீட்டில் கேட்கிறார்கள். எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. எனக்கும் ஆசை தான் ஆனால் நடக்குமா நடக்காதா என மனது அடித்துக் கொள்கிறது என சொல்கிறார். எனக்கு உன் நிலைமை புரிகிறது என தனம் சொல்ல, நீங்க வேண்டாம் என இருந்தீங்க ஆனால் நாங்க வேண்டும் என்று தான இருக்கோம் எங்களுக்கு ஏன் வரமாட்டேங்குது இப்படியே போய்விடுமா என பயமாக இருப்பதாக சொல்கிறார்.

அப்போது தனம் நான் சொல்கிறேன் என தவறாக நினைக்க வேண்டாம் நீங்க மருத்துவமனை சென்று வாருங்கள் என சொல்ல, அப்போ நீங்களும் எனக்கு குழந்தை பிறக்காது என நினைக்கிறீர்களா என்று கேட்கிறார். நான் என்ன சொல்கிறேன் நீ என்ன புரிந்து கொள்கிறாய், உனக்கு எந்த பிரச்சனையும் இருக்காது சொல்ல போனால் இந்த ஒரு வருஷம் தான் நீங்க சேர்ந்து வாழுறீங்க, அதுக்கே நீ இவ்வளவு கவலைப்படுகிறாய், மருத்துவமனை சென்று பார்த்தால் மருத்துவமனையில் இருந்து நிம்மதியாக இருக்கலாம் என சொல்ல கதிர் சரி என சொல்கிறார்.

முழு மனதோடு கண்ணம்மாவை ஏற்றுக் கொண்ட பாரதி, ஜோடியை பார்த்து சந்தோஷத்தில் குடும்பத்தினர் – இன்றைய எபிசோட்!

பின் தனம் ஏன் இப்படி கோவப்படுகிறாள் உன்னிடமும் அப்படி தான் கோவப்படுகிறாளா என கேட்டதற்கு ஆமாம் சில நேரம் அடிப்பாள் என சொல்லி நக்கலடிக்கின்றனர். பின் மீனா வந்து என்ன பேசுனீங்க என்று கேட்க, அவளுக்கு தலைவலி அதான் மாத்திரை கொடுத்தேன் என சொல்கிறார். முல்லை ரூமிற்கு வர இந்த பிரச்சனை அக்கா வரை சென்றுவிட்டது என நினைத்து வருத்தப்பட,கதிர் இதை யோசிக்காதே என சொல்கிறார். ஆனால் என்னால் முடியாது என முல்லை சொல்ல, இதற்கு மருத்துவமனை செல்வது தான் ஒரே வழி என கதிர் சொல்கிறார்.

இது அவ்வளவு பெரிய பிரச்சனையா என கேட்க, டாக்டர் எதுவும் இல்லை என சொல்லிவிட்டால் நீ நிம்மதியாக இருப்ப தான அதற்கு தான் சொல்கிறேன் என்று கதிர் சொல்கிறார். முல்லை எனக்கு டாக்டர் பிரச்சனை என சொன்னால் விட்டுவிட்டு போய்டுவீங்களா என கேட்க, ஆமாம் விட்டுட்டு போவேன் என விளையாட்டுக்கு சொல்கிறார். அதை கேட்டு முல்லை அழுகிறார். உன்னை விட்டுவிட்டு எப்படி நான் போவேன் என கேட்கிறார். பின் நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன் தெரியுமா என கேட்க, எப்போது காதலிச்சீங்க என முல்லை கேட்கிறார். அதெல்லாம் உள்ளே நிறையா இருக்கிறது என கதிர் சொல்கிறார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை – வெளியாகுமா அறிவிப்பு? கொரோனா எதிரொலி!

முல்லை அமர்ந்து இருக்க மீனா முல்லைக்கு டீ கொண்டு வந்து கொடுக்கிறார். அப்போது ஐஸ்வர்யாவும், கண்ணனும் காலேஜ் முடிந்து வர, முல்லை டீயை எடுத்து குடிக்க சொல்கிறார். மீனா நான் போய் டீ போடுறேன் என கிளம்ப டீ போதுமா இல்லை பாதாம்பால் எதுவும் வேண்டுமா என கேட்கிறார். என்ன அக்கா ஒரு மாதிரி பேசுறீங்க என கேட்க, உங்களுக்கு கிடைக்கும் சலுகைகள் அப்படி என குத்தி காட்டி பேசுகிறார். ஆமாம் எங்க வீட்டில் இப்படி எல்லாம் செய்திருக்கமாட்டார்கள் என சொல்ல, ஐஸ்வர்யா நானே டீ போட்டுக் கொள்கிறேன் என சொல்லி உள்ளே செல்கிறார்.

அப்போது கண்ணன் வருத்தமாக நிற்க மீனா பற்றி தான் தெரியுமே நீ எதுவும் நினைக்காதே என சொல்கிறார். மூர்த்தி போன் பேசிக் கொண்டிருக்க, அங்கே ஐஸ்வர்யா சோகமாக நிற்கிறார். மூர்த்தி என்ன நடந்தது என கேட்க, மாமா என எதோ சொல்கிறார். காலேஜ் போய்ட்டு டீ எல்லாம் குடிச்சியா என கேட்க ,நாங்க இருவரும் பாண்டியன் ஸ்டோர்ஸில் வேலை செய்யலாமா என கேட்கிறார். மூர்த்தி நம்ம கடையில் நீ ஏன் வேலை செய்ய வேண்டும் என கேட்க, ஏற்கனவே வேலை செய்து கொண்டு தான இருந்தோம், அப்படியே பழகிவிட்டது அதான் வேலை செய்யாமல் இருக்க முடியாது என கேட்கிறார்.

போய் முதலில் படிங்க என சொல்ல, நாங்க படிக்கிறோம் ஆனால் பகுதி நேரமாக வேலை செய்ய வேண்டும் என சொல்ல, கண்ணன் படித்து நல்ல வேளைக்கு போக வேண்டும் என நினைத்தோம் உன்னை போய் வேலை செய்ய சொல்வோமா என கேட்கிறார். இல்லை கல்யாணம் முடிந்து இருவரும் காலேஜ் போனால் நன்றாக இல்லை என சொல்ல, அதெல்லாம் இருக்கட்டும் முதலில் இருவரும் நன்றாக படிங்க என சொல்கிறார். மூர்த்தி தனத்திடம் பாண்டியன் பற்றி பேசிக் கொண்டிருக்க இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!