முழு மனதோடு கண்ணம்மாவை ஏற்றுக் கொண்ட பாரதி, ஜோடியை பார்த்து சந்தோஷத்தில் குடும்பத்தினர் – இன்றைய எபிசோட்!

0
முழு மனதோடு கண்ணம்மாவை ஏற்றுக் கொண்ட பாரதி, ஜோடியை பார்த்து சந்தோஷத்தில் குடும்பத்தினர் - இன்றைய எபிசோட்!
முழு மனதோடு கண்ணம்மாவை ஏற்றுக் கொண்ட பாரதி, ஜோடியை பார்த்து சந்தோஷத்தில் குடும்பத்தினர் - இன்றைய எபிசோட்!
முழு மனதோடு கண்ணம்மாவை ஏற்றுக் கொண்ட பாரதி, ஜோடியை பார்த்து சந்தோஷத்தில் குடும்பத்தினர் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி திடீரென மாறி கண்ணம்மாவிடம் நல்லபடியாக நடந்து கொள்கிறார். இருவரும் ஜோடியாக வருவதை பார்த்து சௌந்தர்யா மற்றும் குடும்பத்தினர் சந்தோசப்படுகின்றனர்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா இரவு நடந்ததை நினைத்து சமையலறைக்கு வந்து காபி போடுகிறார். அப்போது கண்ணம்மா இந்நேரம் கிளம்பி போயிருப்பார் போல, இவ்வளவு நடந்தும் கொஞ்சம் கூட மாறவில்லை. அவரு இஷ்டப்படி நடந்து கொள்ளட்டும், யாரிடம் அழ கூடாதோ அவர்கள் முன்னாடியே அழ வேண்டிய நிலைமை வருது என நினைத்து கொண்டே திரும்பி பார்க்க அங்கே பாரதி வேஷ்டி சட்டை உடன் வருகிறார். அதை பார்த்து கண்ணம்மா அதிர்ச்சி அடைய, என்ன இப்படி பார்க்கிறாய் நீ எடுத்து கொடுத்த வேஷ்டி சட்டை தான் நன்றாக இருக்கிறதா என கேட்கிறார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை – வெளியாகுமா அறிவிப்பு? கொரோனா எதிரொலி!

பாரதியின் இந்த மாற்றத்தை பார்த்து கண்ணம்மா எதுவும் பேசவில்லை. நேற்று நடந்து கொண்டதை நினைத்து நீங்க இந்நேரம் கிளம்பி சென்றிருப்பீர்கள் என நினைத்தேன் என்று கண்ணம்மா சொல்ல, நான் கிளம்பிட்டேன் நீ தான் கிளம்பவில்லை என பாரதி சொல்கிறார். கண்ணம்மா எங்கே என கேட்க பூஜைக்கு என பாரதி சொல்கிறார். கண்ணம்மா நான் கிளம்பிவிட்டு வருகிறேன் என சொல்லி போக பாரதி கண்ணம்மா முகத்தில் சந்தோசத்தை பார்த்தால் என்னுடைய கோவம் எல்லாம் போய்விட்டது. இதற்காகவே எல்லாத்தையும் மன்னித்து நான் இவளுடன் வாழ தயாராக இருக்கிறேன்.

ஆனால் என்னுடைய சின்ன கோரிக்கையை மட்டும் அவள் செய்ய வேண்டும் என நினைக்கிறார். மறுபக்கம் சௌந்தர்யா பூஜைக்கு கிளம்பி இருக்க, ஹேமா லக்ஷ்மியை கிளப்பி வெளியே அனுப்புகிறார். பின் கண்ணம்மா காரில் வர பாரதியை பார்த்துக் கொண்டே இருக்கிறார், என்ன இப்படி பார்க்கிறாய் என கேட்டதற்கு இந்த ட்ரெஸ் நன்றாக இருக்கிறது என சொல்கிறார். எனக்கு என் புடவை எப்படி இருக்கிறது என கேட்டதற்கு நான் தான எடுத்து கொடுத்தேன் நன்றாக இருக்கிறது என சொல்கிறார்.

நடிகர் தனுஷ் 2 மாதங்களாக ஐஸ்வர்யாவை பிரிந்து இருந்தாரா? ஷாக் ரிப்போர்ட்! பிரிவுக்கான காரணம்!

பின் நம்ம திருமணநாள் என்பதால் கோவிலுக்கு போவோம் என்று பாரதி சொல்ல கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்கின்றனர். கண்ணம்மா பாரதியின் மாற்றத்தை பார்த்து இப்படி ஒரே நாளில் எப்படி மாறிவிட்டார் என நினைத்து யோசித்து கொண்டிருக்கிறார். அங்கே மாயாண்டி வர பாரதி கண்ணம்மா ஒன்றாக இருப்பதை பார்த்து போட்டோ எடுக்கிறார். பின் சௌந்தர்யா பாரதி கண்ணம்மா கிளம்பி விட்டார்களா என தெரியாமல் பதட்டத்தில் இருக்க, வெளியே சென்று பார்க்கிறேன் என சொல்கிறார்.

அப்போது சரியாக பாரதி கார் வர, பாரதியும் கண்ணம்மாவும் கையை பிடித்துக் கொண்டு வருகின்றனர். சௌந்தர்யா, வேணு, அகில், அஞ்சலி, கண்ணம்மாவின் அப்பா என அனைவரும் பார்த்து சந்தோஷத்தில் பூரித்து போகின்றனர். சௌந்தர்யா கண்ணம்மா புடவை நன்றாக இருப்பதாக சொல்ல, பாரதி நக்கல் அடிக்கிறார். பின் ஆரத்தி எடுத்து சௌந்தர்யா உள்ளே வர சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!