மீனா அப்பாவிடம் மீண்டும் உதவி கேட்கும் ஜீவா, கடையை இடிக்க போவதாக சொன்ன போலீஸ்காரர் – இன்றைய எபிசோட்!

0
மீனா அப்பாவிடம் மீண்டும் உதவி கேட்கும் ஜீவா, கடையை இடிக்க போவதாக சொன்ன போலீஸ்காரர் - இன்றைய எபிசோட்!
மீனா அப்பாவிடம் மீண்டும் உதவி கேட்கும் ஜீவா, கடையை இடிக்க போவதாக சொன்ன போலீஸ்காரர் - இன்றைய எபிசோட்!
மீனா அப்பாவிடம் மீண்டும் உதவி கேட்கும் ஜீவா, கடையை இடிக்க போவதாக சொன்ன போலீஸ்காரர் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் சரக்கு லாரி இரண்டு நாட்களாக இருப்பதை கதிர் மூர்த்தியிடம் சொல்கிறார். பின் மூர்த்தி இன்னைக்கு கடையை திறக்க வேண்டும் என கோபத்துடன் பேசுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தியிடம் கதிர் சரக்கு லாரி வந்தது பற்றி சொல்கிறார். இன்னைக்கு எப்படியாவது சரக்கு இறக்கிவிட வேண்டும் என சொல்ல, ஐஸ்வர்யா ராத்திரி சரியான மழை என சொல்கிறார். ராத்திரி மழை வந்துச்சா நான் அதை கவனிக்கவே இல்லையே என தனம் சொல்ல, ஜீவா என்னை கூப்பிட்டு இருக்கலாம் அல்லவா என கேட்கிறார். பின் கதிர் நான் எல்லாம் சரி செய்துவிட்டேன் என சொல்கிறார். பின் மூர்த்தி அம்மாவை வேண்டிக் கொண்டு கிளம்புகிறார்.

TN Job “FB  Group” Join Now

மறுபக்கம் மூர்த்தி சென்று சரக்கு லாரியை பார்க்கிறார். அங்கே எல்லாம் நனையாமல் இருப்பதாக மூர்த்தி சொல்ல, லாரி ட்ரைவர் தம்பி வந்ததால் காப்பாற்ற முடிந்தது இருந்தாலும் மூன்று நான்கு மூட்டை நனைந்துவிட்டது என சொல்கிறார். மூர்த்தி இப்படி நனைந்த பின்னால் எப்படி சரக்கு விற்பது என கேட்கிறார். மூர்த்தி கோவப்பட்டு இன்னைக்கு கடையை திறக்க வேண்டும் என கோவமாக பேசுகிறார். நீங்க கடையில் இறங்கிய பின் நிம்மதியாக கிளம்புவீங்க அதற்கு நான் உத்தரவாதம் என சொல்ல, அந்த அலுவலர் கோவமாக இருக்கிறார். நான் பேசியதற்கு தான் கடையை இடிப்பதாக சொல்கிறார் என சொல்ல நீ சும்மா இரு நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார்.

பின் மீனாவின் அப்பா கடையில் இருக்க மீனாவும் ஜீவாவும் வருகிறார்கள். கடை என்னாச்சு என மீனாவின் அம்மா கேட்க அப்படியே தான் இருக்கிறது என சொல்கிறார். குடவுன் விஷயமாக பேச வந்தோம் என ஜீவா சொல்ல எந்த குடவுன் என மீனாவின் அப்பா கேட்கிறார். அதை கேட்டு ஜீவா அதிர்ச்சி அடைய சரக்கு வைக்க இடம் இல்லை என சொல்கிறார். மீனாவின் அப்பா நான் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கேன் என சொல்ல, மீனா அம்மா பாவம் அவங்க என சொல்ல, அங்கிருந்து மீனாவும் ஜீவாவும் கிளம்புகின்றனர்.

வெண்பாவை மிரட்டும் மாயாண்டி, பாரதியை நினைத்து குழப்பத்தில் இருக்கும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா அவரது தோழிக்கு போன் செய்கிறார். அவர் நான் அப்பாவிடம் கேட்டு சொல்வதாக சொல்ல, கஸ்தூரி அதை எல்லாம் கேட்டுவிட்டு இந்த குடும்பத்திற்கு நீ மட்டும் நிறைய செய்கிறார் என உசுப்பேத்துகிறார். பின் நீ வேண்டும் என்றால் போய் சீல் உடைத்து கடையை திற என சொல்ல, ஏன் இந்த குடும்பத்தை சிக்கலில் மாட்டிவிடவா என சொல்கிறார். மூர்த்தி கடைக்கு வர அந்த வழியே போகிற ஒருவர் கடையை கட்டும் போது பார்த்து கட்டமாட்டீர்களா என கேட்கிறார்.

பின் கதிர் அவரை சத்தம் போட, போலீஸ்காரர் ஒருவர் கடையை சீல் வைத்ததால் இனிமேல் நீங்க இங்கே வர கூடாது என சொல்கிறார். அவர் நீங்க அந்த ஆபிசரை கோவப்படுத்துனீங்களாம் இன்னைக்கு இந்த கடையை இடிக்க போவதாக சொன்னார்கள் என சொல்கிறார். அதை கேட்டு மூர்த்தி கதிர் ஜீவா அதிர்ச்சி அடைகின்றனர். கடையை ஏன் சீல் வைத்தார்கள் என தெரியாமல் எப்படி கடையை இடிப்பார்கள் என மூர்த்தி கேட்டு கோபப்படுகிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!