வெண்பாவை மிரட்டும் மாயாண்டி, பாரதியை நினைத்து குழப்பத்தில் இருக்கும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
வெண்பாவை மிரட்டும் மாயாண்டி, பாரதியை நினைத்து குழப்பத்தில் இருக்கும் கண்ணம்மா - இன்றைய
வெண்பாவை மிரட்டும் மாயாண்டி, பாரதியை நினைத்து குழப்பத்தில் இருக்கும் கண்ணம்மா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
வெண்பாவை மிரட்டும் மாயாண்டி, பாரதியை நினைத்து குழப்பத்தில் இருக்கும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் மாயாண்டி பணத்தை ஏமாற்றியது பற்றி கேட்க வெண்பா பற்றிய உண்மையை சொல்லிவிடுவேன் என சொல்லி மாயாண்டி மிரட்டுகிறார். பின் கண்ணம்மா உண்மையை எப்படி சொல்வது என தெரியாமல் சௌந்தர்யாவிடம் சொல்லி வருத்தப்படுகிறார்.

பாரதி கண்ணம்மா

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பாவிற்கு மாயாண்டி பணத்தை ஏமாற்றிய விஷயத்தை வக்கீல் சொல்கிறார். அப்போது மாயாண்டி வர வெண்பா கோவத்தில் கேள்வி கேட்கிறார். மாயாண்டி சிரித்துக் கொண்டே இதை கண்டுபிடிக்க இவ்வளவு நாளா என நக்கல் அடிக்கிறார். பின் வெண்பாவிடம் நீ செய்தது எல்லாம் பாரதியிடம் சொல்லவிடுவேன் என மிரட்டுகிறார். அதை சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால் 5 லட்சம் வேண்டும் என சொல்கிறான்.

TN Job “FB  Group” Join Now

மறுபக்கம் சௌந்தர்யா கண்ணம்மா பேசிக் கொண்டிருக்க இந்த வயதில் என்ன சொன்னாலும் புரியாது. ஆனால் நீ சொல்வேன் என சொல்லி இருக்கிறாய் என்ன அர்த்தம் என கேட்கிறார். அப்போது கண்ணம்மா குமார் வீட்டில் நடந்தது பற்றி சொல்கிறார். நான் செய்த தவறுக்கு நான் மட்டும் இல்லாமல் லட்சுமி எதற்காக தண்டனை அனுபவிக்க வேண்டும் அதனால் தான் இப்படி செய்தேன் என சொல்ல அதெல்லாம் சரி தான் பாரதி வரமாட்டேன் என சொன்னால் என்ன செய்வாய் என கேட்கிறார். அதெல்லாம் தெரியவில்லை என சொல்ல கோவப்பட்ட சௌந்தர்யா எதாவது செய்து லட்சுமி மனது கஷ்டப்படாமல் பார்த்துக் கொள்ள சொல்கிறார்.

பின் வெண்பா மாயாண்டி பேசியதை நினைத்து கோவமாக இருக்க அப்போது பாரதி வருகிறார். பாரதி சோகமாக இருக்க வெண்பா என்ன காரணம் என கேட்கிறார். எல்லாம் அந்த கண்ணம்மாவால் தான் என பாரதி சொல்ல, என்ன கோர்ட் உத்தரவு படி உன்னுடன் வாழ சொல்கிறாரா என கேட்க அதெல்லாம் இல்லை என பாரதி சொல்கிறார். அவ லட்சுமியிடம் அப்பா யார் என்ற உண்மையை அவளுடைய பிறந்தநாளில் சொல்ல போகிறாளாம் என சொல்ல, வெண்பா அதிர்ச்சி அடைகிறார். இத்தனை நாளாக சொல்லாமலா வளர்த்தால் என சொல்ல, லட்சுமி அப்பா அந்த வருண் தான என வெண்பா சொல்கிறார்.

TNPSC குரூப் 2, குரூப் 4 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – விரைவில் தேர்வு!

அவள் தான் அதை ஒப்புக் கொள்ளமாட்டாளே அப்போ நான் தான் லக்ஷ்மியின் அப்பா என சொல்வாள் , இதில் என்னை வேற பிறந்தநாளுக்கு ஹேமா வர சொல்லிருக்கா என சொல்கிறான் பாரதி நீ பேசாம எதாவது வெளி ஊர் போய் விடு என வெண்பா சொல்ல நானும் அந்த திட்டத்தில் தான் இருக்கிறேன் என பாரதி சொல்கிறார். பின் சௌந்தர்யா வீட்டிற்கு வர அனைவருக்கும் சாப்பாடு வைக்கிறார். அப்போது பாரதி சமையல் அம்மா என்ன சொன்னார் என கேட்க உன்னிடம் சொல்லிவிட்டு தான போனா அப்பறம் என்ன என கேட்கிறார். பின் நீ பேசாமல் அந்த நிகழ்ச்சிக்கு வந்தால் மட்டும் போதும் என சொல்ல அதை கேட்டு பாரதி அதிர்ச்சி அடைகிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!