TNPSC குரூப் 2, குரூப் 4 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – விரைவில் தேர்வு!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை அண்மையில் வெளியிட்டது. அதன்படி இந்த மாதம் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ ஆகிய தேர்வுகளுக்காக அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குரூப் 2, குரூப் 4 தேர்வு
தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அரசு பதவிகளுக்கேற்ப குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை TNPSC தேர்வாணையம் நடத்தி வருகிறது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. அதனால் அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தவர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர்.
தமிழக அரசு சார்பில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50000 – விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ!
தற்போது கொரோனா பரவல் குறைந்த சூழலில் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. அத்துடன் 2022ம் ஆண்டு முதல் தேர்வுகள் முறைப்படி நடத்தப்படும் என்றும் TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அத்துடன் TNPSC தேர்வாணையம் நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுக்கும் தமிழ் தாளில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கட்டாயமாக்கியுள்ளது. மேலும் இதில் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே அடுத்த தாள் மதிப்பீடு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை – வலுக்கும் கோரிக்கை! அரசின் முடிவு என்ன?
இந்த நிலையில் இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது, தமிழகத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு தேர்வு கால அட்டவணையில் குறிப்பிட்டவாறு இந்த மாதம் வெளியாகும் என்றும் வெளியான அடுத்த 75 நாளில் தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் 2022ம் ஆண்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரை 32 வகையான தேர்வுகள் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அரசு அறிவித்த படி, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் தாள் கட்டாயமாக நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.