கதிரிடம் பணம் கொடுக்காமல் இருக்கும் மூர்த்தி, கோவத்தில் கண்ணனை திட்டும் முல்லை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் மீது மூர்த்தி கோவமாக இருக்க முல்லை கோவப்பட்டு கண்ணன் ஐஸ்வர்யாவை திட்டுகிறார். உடனே ஐஸ்வர்யா கஸ்தூரியிடம் பணம் கேட்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை எழுந்து அனைவருக்கும் காபி கொடுக்க, நைட் எல்லாம் தூங்கவில்லையா என கேட்கிறார். அப்போது கதிர் வர, ஜீவாவிடம் வேலை எல்லாம் சரியாக நடக்கிறதா என கேட்கிறார். பின் கான்ட்ராக்ட்டரிடம் பணத்தை கொடுத்துவிடு என சொல்ல கதிர் பணத்தை வாங்க கை நீட்டுகிறார். ஆனால் மூர்த்தி பணத்தை ஜீவாவிடம் கொடுக்க ஜீவா அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அவனிடம் பணத்தை கொடுக்கலாமே என சொல்ல, அவன் தான் பணத்தை தொலைத்து விடுறனே. நீ கொடுத்துவிட்டு அவரிடம் நேரமாகிவிட்டது என மன்னிப்பு கேள் என சொல்கிறார்.
ஐஸ்வர்யா இட்லி விற்று கொண்டிருக்க இன்னும் உங்க வீட்டில் இருந்து யாரும் இட்லி வாங்க வரவில்லை என சொல்கிறார். அப்போது முல்லை வந்து நிற்க நீங்க தான் இன்னைக்கு இட்லி வாங்க வந்திருக்கீங்களா என கேட்கிறார். உடனே கோவப்பட்ட முல்லை பொறுமையை இழந்து கண்ணனை சத்தம் போடுகிறார். பின் முல்லை அருகில் வந்து நீங்க எல்லா பிரச்சனைகளையும் இழுத்து விட உங்களால் அவங்க கஷ்டப்படுகிறார். ஏற்கனவே இவளை நீ காதலிக்கும் போது பீஸ் கட்ட நீ பணத்தை எடுத்ததற்கு அவங்க நைட் எல்லாம் போஸ்டர் ஓட்டினார்கள். இப்போதும் எதோ பண்ணிட்டு அவங்களிடம் பணம் வாங்கி இருக்கீங்க அவங்க என்ன வேலை செய்து பணத்தை வைக்க முடியும். மாமா என்ன நினைப்பாங்க அதை பற்றி உங்களுக்கு அக்கறை இல்லை என சொல்லி இனிமேல் என்னிடம் பேசாதே என ஐஸ்வர்யாவிடம் சொல்கிறார்.
அப்போது கண்ணன் அண்ணா பாவம் என சொல்ல, திருப்பி கொடுத்துறலாம் என சொல்கிறார். பின் கதிர் சாப்பிட வர முல்லை நான் இரவு கோவமாக இருந்ததற்கு மன்னிப்பு கேட்கிறார். பின் முல்லை சாப்பிடாமல் இருக்க கதிர் அவருக்கும் சாப்பாடு வைத்து கொடுக்கிறார். பின் கண்ணன் மூர்த்தி பேசியதை பற்றி நினைத்து பார்க்கிறார். ஐஸ்வர்யா வந்து ஏன் சோகமாக இருக்க என கேட்க, சாப்பிட வா என கூப்பிடுகிறார். அப்போது கண்ணன் கதிர் அண்ணனுக்கு எப்படியாவது காசு கொடுக்க வேண்டும் முல்லை அண்ணி எப்படி பேசுனாங்க பாரு என சொல்ல, ஐஸ்வர்யா அவங்க என்னை சொந்தக்காரர் போல இல்லாமல் இப்படி பேசுறாங்க என சொல்ல, அவங்க சொன்னது எல்லாம் சரி தான என கேட்கிறார். பின் கஸ்தூரி வர என்ன இருவரும் தனியாக இருக்கீங்க என கேட்கிறார்.
ஒரு 15000 ருபாய் கிடைக்குமா என கேட்க, எதற்கு என கேட்கிறார். கண்ணன் சொல்ல வேண்டாம் என சொல்ல, கஸ்தூரி ஏன் என்னிடம் சொல்ல கூடாது என சொல்றீங்க என் பணம் வேண்டும் ஆனால் என்னிடம் உண்மையாக இருக்க மாட்டிங்களா என கேட்கிறார். அப்போது ஐஸ்வர்யா மீனா அப்பா கடையில் எங்க மீது திருட்டு பட்டம் கட்டி அனுப்பிட்டாங்க என சொல்ல, கஸ்தூரி அதிர்ச்சி அடைகிறார். இன்னைக்கே பணம் வேண்டும் என கேட்க, என்ன செய்வது என தெரியாமல் இருந்தோம் அப்போது கதிர் மாமா எங்களுக்கு பணம் கொடுத்தார் அதனால் வீட்டில் பிரச்சனை ஆகிவிட்டது என சொல்ல, உன்னிடம் பணம் இருக்கிறதா என கேட்கிறார். என்னிடம் ஏது இவ்வளவு பணம் என சொல்ல அப்போ ஏன் என்னிடம் இவ்வளவு விவரம் கேட்ட என கேட்கிறார். பின் கண்ணன் இவர்களிடம் சொல்ல வேண்டாம் என அங்கே போய் எல்லாத்தையும் சொல்ல போறாங்க என சொல்கிறார்.