மது அருந்தியவர் போல் நடிக்க “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஜீவா செய்த காரியம் – குவியும் பாராட்டுக்கள்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், சென்ற வாரம் முழுவதும் ஜீவா கதாபாத்திரம் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டது அனைத்து மக்களையும் ரசிக்க வைத்தது. இந்நிலையில் அந்த எபிசோடுகளில் வெங்கட் நடிக்க பட்ட கஷ்டங்கள் குறித்து வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல சுவாரஸ்யமான காட்சிகள் வந்த வண்ணம் இருக்கிறது. குடும்பமே தங்களது உழைப்பை போட்டு ஆசை ஆசையாக புது கடை ஒன்றை கட்ட ஆனால் அதை திறக்க பல கஷ்டங்கள் வருகிறது. அதை எல்லாம் தங்களது ஒற்றுமையால் போராடி கடையை திறந்து இருக்கின்றனர். அதனால் குடும்பமே சந்தோஷத்தில் பிரமாண்டமாக கடை திறப்பு விழா நடத்தியது. சொந்தங்கள் வாழ்ந்த குடும்பத்தில் ஒவ்வொருத்தரும் சந்தோஷத்தில் இருந்தனர். இந்நிலையில் கடை திறந்த சந்தோஷத்தில் தனத்தின் அண்ணன் மது விருந்து கேட்கிறார்.
அதே போல மீனாவின் அண்ணன் கைலாஷ் ஜீவாவிடம் மது விருந்து கேட்கிறார். இருவரும் குடிக்க ஜீவா அளவுக்கு மீறி குடிக்கிறார். போதை தலைக்கேறிய அவரை மீனாவின் அப்பா அழைத்து கொண்டு வந்து வீட்டில் விடுகிறார். அதன் பின் ஜீவா செய்த ரகளை காட்சிகள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. அவர் பேசிய ஒவ்வொரு வசனங்களும் மிகவும் நகைச்சுவையாக இருந்தது. இந்த சீரியலில் ஜீவா கதாபாத்திரம் அமைதியாகவே காட்டப்பட்ட நிலையில் தற்போது இந்த எபிசோடுகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
இந்நிலையில் ஜீவாவாக நடிக்கும் வெங்கட் இந்த எபிசோடுகளில் நடிக்க உண்மையாகவே குடித்தாரா என பலருக்கு சந்தேகம் எழுந்தது. அது பற்றி வெங்கட் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை ஷேர் செய்து இருக்கிறார். அதில் இந்த சீன்களில் நடிக்க அவர் பல கஷ்டங்களை பட்டு இருக்கிறார். அவர் ஒரு டீடோட்டலர் என்பதால் மிகவும் கஷ்டப்பட்டு நடித்ததாகவும் கண் சில நாட்களுக்கு மிகவும் எரிந்ததாகவும் சொல்லி இருக்கிறார். இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் அவரின் கஷ்டத்தை பார்த்து வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்.