‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர், முல்லைக்கு பிறந்த இரட்டை குழந்தைகள் – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அதிகளவு ரசிகர்களை கொண்டிருக்கும் கதிர் – முல்லை ஜோடிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பது போல இன்றைய நாளுக்கான புதிய ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பப்படும் முக்கியமான சீரியல்களில் ஒன்று ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. கூட்டு குடும்ப வாழ்க்கையை மையமாக வைத்து காட்சிகளை நகர்த்தி வரும் இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் வெவ்வேறு குணாதிசயங்களை கொண்ட 4 ஜோடிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு ஜோடிக்கும் சொல்லக்கூடிய அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் உண்டு.
அதில் குறிப்பாக கதிர் – முல்லை ஜோடிக்கு அதிகளவு ரசிகர்கள் உள்ளனர். இந்த ஜோடியின் திருமணம் எதிர்பாராதவிதமாக நடைபெற்றது என்றாலும் இவர்களுக்கு இடையே நடைபெறும் மோதல், சண்டை, காதல் என அனைத்து காட்சிகளும் அதிகம் கவனம் ஈர்த்து வரும். அந்த வகையில் கதிர் – முல்லைக்கு இடையே தற்போது தான் பரஸ்பர புரிதல் உருவாகி இருக்கும் நிலையில் இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் அடுத்த கட்டத்துக்கு நகர இருக்கிறது.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ரோஷினிக்கு பதில் புதிய கண்ணம்மா இவர் தானா? இணையத்தில் கசிந்த தகவல்!
அதன் படி, தனம் மற்றும் மீனாவின் குழந்தைகளை பார்த்து தனக்கும் குழந்தை வேண்டும் என முல்லை ஆசைப்படுகிறார். அதனை கதிரிடம் கூறுவது போல கடந்த வார எபிசோடுகள் ஒளிபரப்பானது. இப்போது குழந்தை பற்றிய கனவில் இருக்கும் முல்லைக்கு இரட்டை குழந்தைகள் பிறப்பது போல கதிர் யோசித்து பார்க்கிறார். இது தொடர்பான காட்சிகள் இன்றைய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எபிசோடில் வெளியாக இருக்கும் நிலையில் அதற்கான ப்ரமோ வலைதளங்களில் வெளியாகி பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.