கண்ணனை அடித்த கடை பையனுடன் சேர்ந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர் – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரன், கண்ணனை அடித்த கடை பையனுடன் எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஒரு சிறந்த கூட்டுக்குடும்ப கதையை கொண்டுள்ளது. அண்ணன், தம்பிகள் நான்கு பேர் இருக்கும் குடும்பத்தில் எப்படி எல்லாம் பொறுத்து போக வேண்டும், சுயநலம் இல்லாமல் பாசத்துடன் இருக்க வேண்டும் என கதைக்களம் இருக்கிறது. காதல் திருமணம் செய்ததால் கண்ணன் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்படுகிறார். அவருக்கு இரண்டாவது அண்ணி உதவியால் அவரது அப்பா கடையில் வேலை கிடைக்கிறது. கண்ணன் ஐஸ்வர்யா இருவரும் வேலை செய்ய கடை பையன் பணத்தை திருடி விடுகிறான்.
விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 அமீர் பற்றி பாவனியிடம் பேசும் குடும்பத்தார் – ப்ரோமோ ரிலீஸ்!
ஆனால் கண்ணன் தான் பணத்தை திருடியதாக நினைத்து வேலையைவிட்டு அனுப்ப மீனாவும், ஜீவாவும் சிசிடிவி காட்சிகளை வைத்து கடை பையன் தான் பணத்தை எடுத்தான் என கண்டுபிடிக்கின்றனர். அதனால் கதிர், ஜீவா அவனை ரோட்டில் வைத்து அடிக்க, கோவப்பட்ட அவன் சும்மா விடமாட்டேன் என ரௌடிகளை வைத்து கண்ணனை அடிக்கிறான். அதனால் கண்ணன் ரத்தம் சொட்ட சொட்ட கீழே கிடக்க கதிர் ஜீவா அவனை மருத்துவமனையில் சேர்க்கின்றனர்.
பிரசவத்திற்கு பின் “பாரதி கண்ணம்மா” வெண்பா கணவருடன் வெளியிட்ட வீடியோ – குவியும் லைக்குகள்!
அதனால் கண்ணனை தனம் வீட்டிற்குள் சேர்த்து கொள்கிறார். இந்நிலையில் கதிர் கதாபாத்திரத்தில் நடிக்கும் குமரன் தனது இன்ஸ்டா பக்கத்தில் கடை பையனுடன் புகைப்படம் வெளியிட்ட, சீரியலில் தான் கெட்டவன் நிஜத்தில் நல்ல பையன் என குறிப்பிட்டு இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.