‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மூர்த்தியின் பதிவு – கொந்தளித்த விஜே சித்து ரசிகர்கள்! என்ன நடந்தது?
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இது குறித்து அந்த சீரியல் நடிகர் இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை வெளியிட்ட நிலையில் அதை பார்த்த விஜே சித்ராவின் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
விஜே சித்ரா:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடந்த 2 வாரங்களாக செண்டிமெண்ட் காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. லட்சுமி அம்மா இறப்பு, கடைசி வரை அம்மாவை பார்க்காத கண்ணன், அம்மா இறந்ததற்கு கண்ணன் மீது பழி போடும் ஊர் மக்கள் என பல சம்பவங்கள் அரங்கேறி TRPயில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் மற்றொரு மகிழ்ச்சியான செய்தி நடந்துள்ளது. இது பற்றி சீரியலில் மூத்த அண்ணன் மூர்த்தி ரோலில் நடித்து வரும் ஸ்டாலின் முத்து தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போட்டு இருக்கிறார்.
முதன்முறையாக மனம் திறந்த “பாரதி கண்ணம்மா” பரீனா – ‘தனது வாழ்க்கையில் செய்த தவறு’!
அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடங்கி இன்று முதல் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதாக பதிவிட்டு புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருந்தார். மேலும் சத்தியமூர்த்தியாக என்னை தேர்வு செய்தவர்களுக்கும், விஜய் தொலைக்காட்சியை சார்ந்தவர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், சக நடிகர், நடிகைகளுக்கும் மற்றும் இத்தொடரை வெற்றியடைய முதற்முழு காரணமாகிய ரசிகர்களாகிய உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். உங்கள் ஆதரவுகளோடு தொடர்ந்து பயணிக்கிறோம்” என ஸ்டாலின் முத்து பதிவிட்டு உள்ளார்.
சன் டிவி “சித்தி 2” சீரியல் வெண்பாவின் சினிமா பயணம் – ரசிகர்கள் வாழ்த்து!
ஆனால் அவர் பதிவிட்டிருந்த புகைப்படம் தற்போது நடிக்கும் நடிகர், நடிகைகள் இருக்கும் புகைப்படம். அதில் முல்லையாக காவ்யா அறிவுமணி இருக்கிறார். அதற்கு முன்பு அந்த ரோலில் நடித்த விஜே சித்ரா போட்டோவை ஸ்டாலின் பதிவிடவில்லை, அவர் பெயரை கூட எங்கும் குறிப்பிடவில்லை என சொல்லி தற்போது சித்து ரசிகர்கள் கோபத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் சித்து போட்டோவை ஏன் போடல, கதிர் முல்லை கெமிஸ்ட்ரி தான் சீரியல் ஓட முக்கிய காரணமாக இருந்தது. எல்லாரும் சித்ராவை மறந்துடீங்க போல என ரசிகர் ஒருவர் கொந்தளித்துள்ளார்.
இதுலாம் கோவத்துக்கான விடயம்னு தூக்கிட்டு வராதீக. வேண்டும்னு அப்படி பண்ணிருகாகமாட்டார்