கதிரை வம்பிழுக்கும் எதிர் டீம் போட்டியாளர், புது வீடு பற்றி பேசும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் முல்லை போட்டியில் கலந்து கொள்ள, எதிர் தரப்பில் இருக்கும் டீம் கதிரை வம்புக்கு இழுக்கின்றனர். அதனால் கதிர் கோவப்பட ஆனால் முல்லை அமைதியாக இருக்க சொல்கிறார். மறுபக்கம் மூர்த்தி புது வீடு பற்றி பேசுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் முல்லையும் போட்டியில் கலந்து கொள்ள அப்போது எதிர் டீமில் இருப்பவர்கள் யுடியூப் சேனலிற்கு வீடியோ எடுக்கின்றனர். ஆனால் அங்கே போட்டி நடத்துபவர் இப்படி எல்லாம் வீடியோ எடுக்க கூடாது என சொல்கிறார். ஆனால் அவர்கள் கேட்காமல் வீடியோ எடுக்கின்றனர். அப்போது அவர்கள் கதிர் முல்லையை பற்றி பேச அவர்கள் குன்னக்குடியில் இருந்து வந்து இருக்காங்களாம். எதோ ஹோட்டல் வைத்து நடத்துவதாக சொல்கிறார். அவர்கள் வெற்றி பெறாமல் இருந்தால் நீங்க தான் வெற்றி பெறுவீர்கள் என சொல்ல, இன்னும் நிறைய சுற்று இருக்கிறது பார்த்துக் கொள்ளலாம் என சொல்கிறார்.
Follow our Instagram for more Latest Updates
பின் அவர்கள் மீண்டும் யுடியூப் சேனலிற்கு வீடியோ எடுக்க அப்போது போட்டி நடத்தும் பெண் ஒருவர் வந்து எத்தனை முறை சொன்னாலும் கேட்கமாட்டேங்குறீங்க என சத்தம் போடுகிறார். பின் அவர்கள் போனை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். கதிர் முல்லையிடமும் போனை வாங்கி வைத்துவிடுகின்றனர். பின் கதிர் முல்லையிடம் அனைவரும் வந்து வாழ்த்து சொல்கின்றனர். முல்லை மொத்த போட்டியிலும் ஜெயித்தால் என்ன ஆகும் என சொல்லி சந்தோசப்பட, ஆனால் கதிர் அதெல்லாம் இல்லை சீக்கரம் முடித்துவிட்டு சாயங்காலம் வீட்டிற்கு கிளம்ப வேண்டும் என சொல்கிறார்.
Exams Daily Mobile App Download
மறுபக்கம் கதிரும் முல்லையும் பேசிக் கொண்டிருக்க, முல்லை கதிரின் தோளில் சாய்ந்து கொள்கிறார். அப்போது எதிர் டீம் நபர் வந்து நீங்க உண்மையாவே கணவன் மனைவி தானா இல்லை வேற எதாவது என கேள்வி கேட்கிறார். இப்போ போட்டி நடக்கும் போது நீங்க பார்க்கில் இருப்பது போல இருக்கீங்க என கேட்க, கதிருக்கு கோவம் வந்து அடிக்க செல்கிறார். அப்போது எதிர் டீமில் நிறைய பேர் வந்து கதிரை மிரட்டுகின்றனர். ஆனால் முல்லை கதிரை கோவப்படாமல் இருக்க சொல்கிறார். மறுபக்கம் வீட்டில் மூர்த்தி பேசிக் கொண்டிருக்க கண்ணன் மூர்த்தியை வம்பிழுக்கிறார்.
பாரதி கண்ணம்மாவில் இப்படி ஒரு Climax-ஆ.. யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்த கண்ணம்மா!
ஜீவா அண்ணனை கலாய்க்காமல் இருக்க சொல்ல, எல்லாரும் கண்ணனை அமைதியாக இருக்க சொல்கிறார்கள். மீனா உனக்கு கல்யாணம் ஆகிவிட்டது கொஞ்சம் பொறுப்பாக இரு என சொல்ல, நீங்க முதலில் பொறுப்பாக இருங்க என கண்ணன் சொல்கிறார். பின் மூர்த்தி புது வீடு எப்படி இருக்க வேண்டும் என கேக்க, கண்ணனும் மீனாவும் வீட்டில் ரூம் எல்லாம் எப்படி இருக்க வேண்டும் என சொல்கிறார்கள். கண்ணன் 4 கார் வைக்கும் அளவிற்கு பார்க்கிங் வேண்டும் என சொல்கிறார். கயலுக்கு, பாண்டியனுக்கு, என தனி தனியாக ரூம் வேண்டும் என சொல்கிறார்கள். பின் தனம் மூர்த்தியை கோவிலுக்கு போக சொல்கிறார். மறுபக்கம் கதிர் முல்லைக்கு நான்காம் சுற்று முடிவுகள் வர உள்ளன. கதிர் முல்லை மூன்று போட்டியில் வெற்றி பெற, அதை பார்த்து எதிர் டீம் போட்டியாளர் கோபப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.