தனத்திற்கு வெளி ஊரில் டிரீட்மென்ட்.. மூர்த்தி உண்மையை கண்டுபிடிப்பாரா? – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” அப்டேட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தனத்திற்கு நல்லபடியாக குழந்தை பிறந்துள்ள நிலையில், அடுத்து குடும்பத்திற்கு தெரியாமல் அவருக்கு டிரீட்மென்ட் செய்ய பெண்கள் எல்லாரும் திட்டமிடுகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனத்திற்கு கேன்சர் வந்துவிட அதை வைத்தே கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. முதலில் தனத்திற்கு ஆப்ரேசன் மூலம் குழந்தை பிறக்க பல தடைகள் இருந்தது. ஆனால் எப்படியோ குடும்பத்திற்கு தெரியாமல் நல்லபடியாக குழந்தை பிறந்துவிட்டது. தனத்தால் குழந்தைக்கு பால் கொடுக்க முடியாமல் இருக்க, தனம் அம்மாவிற்கு அதில் சந்தேகம் வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
இருந்தாலும் தனம் எதையாவது சொல்லி சமாளித்து விடுகிறார். மேலும் அவர், டிரீட்மென்ட் செல்ல முல்லை ஒரு திட்டத்தை சொல்கிறார். அதாவது நாம மூன்று பேரும் எக்ஸாம் இருப்பதாக சொல்லிவிட்டு டிரீட்மென்ட் போகலாம் என சொல்ல, தனம் அது எப்படி முடியும் என கேட்கிறார்.
தமிழகத்தில் நாளை (ஆக.04) மின்தடை – அலர்ட்டா இருங்க மக்களே!
எப்படியாவது பேசலாம் என சொல்ல, மூன்று பேரும் வெளி ஊருக்கு சென்று டிரீட்மென்ட் பார்க்கின்றனர். அது நல்லபடியாக முடியுமா? தனம் நல்லபடியாக குணமாகி வருவாரா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.