மன வருத்தத்துடன் கலங்கிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஜீவா – அவரே வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் ஷாக்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா வேடத்தில் நடித்து வரும் வெங்கட் தற்போது வெளியிட்டுள்ள பதிவில் மிகவும் மனவருத்தத்துடன் தன் கருத்தை தெரிவித்துள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜீவாவின் பதிவு:
சின்னத்திரையில் நடிகர், நடிகைகள் தங்கள் நிஜ பெயரை விட, தாங்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களின் பெயரில் தான் அதிகம் அழைக்கப்படுகின்றனர். அந்த அளவிற்கு சீரியல் கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் பதிந்து விடுகிறது. நடிகர்கள் தங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சீரியல்களை இதனால் தான் தேர்வு செய்கின்றனர். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அனைவரின் திறமையும் வெளிகொண்டு வரப்படுகிறது. இவர்களில் ஜீவா – மீனா ஜோடிக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.
தமிழகத்தில் நாளை (பிப்.26) ரேஷன் கடைகள் வழக்கம் போல இயங்கும் – அரசு உத்தரவு!
இந்த வாரம் முழுவதும் ஜீவா குடித்து விட்டு செய்யும் ரகளைகள் தான் சின்னத்திரையின் ஹாட் டாபிக் ஆக சென்று வருகின்றது. ஜீவா கடை திறப்பு விழா நடந்த சந்தோஷத்தில் குடித்து விட்டு செய்யும் ரகளைகள் செம காமெடி ரகமாக இருந்தது. வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து ஜீவா பாச மழையை பொழிந்து வருகிறார். இதனால் அனைவரும் ஜீவாவை வெகுவாக பாராட்டி வருகின்றனர். மிகவும் திறமையாக நடித்து அனைவரையும் கவனிக்க வைத்து விட்டார் வெங்கட்.
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அரசு முக்கிய உத்தரவு!
ஆனால் ஒரு சிலர் சமூக வலைத்தளங்களில் இவ்வளவு தத்ரூபமாக நடித்துள்ளீர்களே நிஜமாகவே குடித்தீர்களா என்று கேட்டுள்ளனர். அதற்கு ஜீவா நான் எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன். இதற்காக தான் செய்த மெனெக்கெடல்களை ஜீவா வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். சீரியல் சீன்களுக்காக தான் எந்த வேலையையும் வீட்டில் செய்வதில்லை மாறாக ஸ்பாட்டில் தான் செய்வதாகவும் கூறியுள்ளார். ஜீவா கண்களை ஏதோ செய்வது போலவும் உள்ளது, இதனால் ரசிகர்கள் இந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.