‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தில் உண்டாகும் பிளவு – அடுத்து வரவிருக்கும் ட்விஸ்ட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது குடும்பத்தில் தற்போது அவ்வப்போது சண்டைகள் நடப்பது போல் காட்சிகள் வருகின்றது. இதனால் அடுத்தடுத்து வரப்போகும் எபிசோடுகளில் மாற்றங்கள் நடக்க வாய்ப்புகள் இருக்கிறது. இது குறித்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைய இருக்கிறது.
பிரியப்போகும் குடும்பம்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய அம்சமாக இருப்பது கூட்டுக் குடும்பம் தான். தற்போதைய காலகட்டத்தில் கூட்டுக் குடும்பம் என்பது மிகவும் அரிதான விஷயமாகி விட்டது. அதனால் தான் கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து நடந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களை கவர்ந்தது. குடும்பத்தில் எந்த வித பிரிவினையும் இல்லாமல், அனைவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வது போன்ற கதையம்சமாக இருக்கும்.
Exams Daily Mobile App Download
ஆனால் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலும் அவ்வப்போது சிறு சிறு சண்டைகள் நடந்து வருகின்றது. இதனால் குடும்பத்தில் அமைதி குலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. வீட்டில் இடம் பற்றாக்குறையாக இருப்பதால் புதிய வீடு கட்டலாம் என்று அனைவரும் ஆசைபடும் வேளையில் தான்,முல்லைக்கு இயற்கை முறையில் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்பது அனைவருக்கும் தெரிய வருகிறது. இதனால் 5 லட்சம் கடனாக வாங்கி முல்லைக்கு சிகிச்சை செய்கிறார்கள். ஆனால் அதுவும் வெற்றி பெறாமல் போய் விடுகிறது.
இதனால் வீட்டில் உள்ள அனைவரும் கதிர் மற்றும் முல்லையின் காதுபடவே பணம் வீணாகி விட்டதாகவும், வீடு கட்டும் திட்டம் நின்று விட்டதாகவும் பேசுகிறார்கள். இதனால் முல்லையும், கதிரும் அதிகம் கவலைபடுகின்றனர். இந்நிலையில், கடன் கொடுத்தவர் பணத்தை கேட்டு வீடு வர வந்து சத்தம் போடுகிறார். இதனால் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் இவர்களால் தான் எல்லாம் என்று சொன்னதும், முல்லையின் அம்மா சண்டை போடுகிறார். இதனால் கதிரும், முல்லையும் எங்களுக்கு எதுவும் வேண்டாம் என்று குடும்பத்தை விட்டு பிரிந்து செல்வது போல் கதை மாற உள்ளது.