கண்ணன், ஐஸ்வர்யா காதலிப்பதை கண்டுபிடித்த பிரசாந்த் – இன்றைய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எபிசோட்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இன்று அனைவரும் வளைகாப்பு நிகழ்ச்சியில் தனத்திற்கு வளையல் அணிவித்து மகிழ்கின்றனர். கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் காதலிப்பதை பிரசாந்த் தெரிந்து கொள்கிறார்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இன்று தனத்திற்கு அனைவரும் வளையல் அணிவிக்கின்றனர். தனத்தின் வீட்டில் இருந்து தங்க வளையல் அணிவிக்கின்றனர். மீனா வீட்டினர், பிரசாந்த் மற்றும் முல்லை வீட்டினர் அனைவரும் அவருக்கு தங்கத்திலான ஆபரணங்களை வாங்கி தருகின்றனர். அப்போது பிரசாந்த் ஐஸ்வர்யாவுடன் செல்பி எடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால், ஐஸ்வர்யாவிற்கு இது பிடிக்காததால் ஓரமாக ஒதுங்கி நிற்கிறார். இதனால் பிரஷாந்திருக்கு கோபம் வந்து விடுகிறது.
பாரதி கண்ணம்மா வெண்பா கர்ப்ப காலத்தில் செய்த காரியம் – ரசிகர்கள் விமர்சனம்!
இன்று சிறப்பு விருந்தினர்களாக விஜய் தொலைக்காட்சின் நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர். அனைவரும் தனம், மூர்த்தி குடும்பத்தினருடன் ஆடுகின்றனர். அப்போது கண்ணன் ஐஸ்வர்யாவிற்கு ரோஸ் கொடுக்கிறார். இதனை தூரத்தில் இருந்து பார்க்கும் பிரஷாந்திருக்கு கோபம் வந்து விடுகிறது. இருவரும் தனியாக நின்று பேசுவதையும் பார்த்து விடுகிறார். ஆனால், அதனை வெளிக்காட்டாமல் அமைதியாக சென்று விடுகிறார்.
TN Job “FB Group” Join Now
நிகழ்ச்சி முடிந்ததும் ஜெகா தங்களது வீட்டிற்கு தனத்தினை அழைத்து செல்ல வேண்டும் என்று கூறுகிறார். இதனை கேட்டு மூர்த்தி குடும்பத்தினர் அனைவரும் வருத்தம் அடைகின்றனர். ஜீவா, கதிர் மற்றும் கண்ணன் மூவரும் கண் கலங்கி விடுகின்றனர். அவரை போக வேண்டாம் என்று மீனா கூறுகிறார். இதனை கேட்டதும் தனத்திற்கு அழுகை வந்து விடுகிறது. தான் வீட்டிற்கு வரவில்லை என்று தனது அண்ணன் ஜெகாவிடம் கூறி விடுகிறார். இதனால் மூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்து விடுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.