கண்ணன் காதல் விஷயத்தை பிரசாந்திடம் கூறிய ஐஸ்வர்யா – பரபரப்பான திருப்பங்களுடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!
விஜய் தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தொடரின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு பெற்று ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான், “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இதில் கூட்டு குடும்பத்தில் நடக்கும் சண்டைகள், அன்பு என்று மிகவும் யதார்த்தமாக எடுத்துக் காட்டி வருகின்றனர். தற்போது பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த கதாநாயகி தனத்தின் சீமந்த விழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது. தனம் தந்து பிரசவத்திற்கு கூட தனது தாய் வீட்டிற்கு செல்லாமல் தனது வீட்டில் இருப்பதாக கூறி விடுகிறார்.
முத்துராசை கொலை செய்த கத்தி? சந்தேகம் அடையும் மாயன் – இன்றைய ‘நாம் இருவர், நமக்கு இருவர்’ எபிசோட்!
அவர்களது அன்பினை புரிந்து கொள்ளும் அவரது அண்ணன் ஜெகா அவரை அவரது தாய் வீட்டில் இருப்பதற்கு ஒத்துக்கொள்கிறார். இது ஒரு புறம் இருக்க, ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் இருவரும் காதலித்து வருகின்றனர். ஆனால், ஐஸ்வர்யாவிற்கு பிரசாந்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இருவரும் தற்போது வரை காதலித்து வருகின்றனர். ஒரு ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் பிரசாந்த்திடம் ஐஸ்வர்யா தான் கண்ணனை காதலிப்பது குறித்து கூறி விடுகிறார். வீட்டினர் அவருக்கும் பிரஷாந்திற்கும் இன்னும் 1 வாரத்தில் திருமணம் செய்ய முடிவு எடுக்கின்றனர்.
TN Job “FB Group” Join Now
இதனை தெரிந்து கொள்ளும் கண்ணன் அதிர்ச்சி அடைந்து விடுகிறார். இது குறித்து ஐஸ்வர்யாவிடம் கேட்கிறார். அதற்கு ஐஸ்வர்யா தாங்கள் காதலிக்கும் விஷயத்தினை பிரசாந்த்திடம் கூறியதாகவும், அவர் கண்டிப்பாக திருமணத்தை நிறுத்தி விடுவார் என்றும் கூறுகிறார். இதனை பின்னால் இருந்து கேட்கும் பிரசாந்த், ‘அப்படி திருமணத்தை நிறுத்த பிரசாந்த் ஒன்றும் முட்டாள் கிடையாது’ என்று கூறுகிறார். இப்படி ட்விஸ்டுடன் ப்ரோமோ முடிந்து விடுகிறது.
“நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!