‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்துடன் இணைந்த கண்ணன் & ஐஸ்வர்யா ஜோடி – வெளியான புகைப்படம்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்பத்துடன் இணைந்த கண்ணன் & ஐஸ்வர்யா ஜோடி - வெளியான புகைப்படம்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்பத்துடன் இணைந்த கண்ணன் & ஐஸ்வர்யா ஜோடி - வெளியான புகைப்படம்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்துடன் இணைந்த கண்ணன் & ஐஸ்வர்யா ஜோடி – வெளியான புகைப்படம்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா ஜோடி மீண்டும் குடும்பத்துடன் இணைந்து உள்ளவாறு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

சின்னத்திரை தொடர்களுக்கு என மக்கள் மத்தியில் எப்போதும் ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது தனி சிறப்பு தான். அந்த வகையில் விஜய் டிவியின் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் ஒரு முக்கியமான தொடரான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மக்களின் ஆதரவை பெற்று இதுவரை 670 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

திடீரென நிறுத்தப்பட்ட ஜீ தமிழ் ‘கோகுலத்தில் சீதை’ சீரியல் – வெளியான தகவல்!

இன்றைய காலகட்டத்தில் இல்லாத ஒரு கூட்டு குடும்ப வாழ்க்கையை, அதன் பிரச்சனைகளை, ஒருவருக்காக மற்றவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை, தியாகங்களை அழகாக எடுத்துரைத்து வருகிறது இத்தொடர். அந்த வகையில் இத்தொடரின் காட்சிகள் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் கடைக்குட்டி கண்ணனை வைத்து நகர்கிறது. அதில் கண்ணன் கதாபாத்திரத்தில் வரும் வீட்டின் கடைசி வாரிசு, குடும்பத்துக்கு தெரியாமல் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டு வீட்டுக்கு வருகிறான்.

அந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளாத பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு துரத்துகிறது. இதனால் செய்வதறியாது திகைத்த இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதுவரையுள்ள கதைக்களம் தான் தற்போது எபிசோடுகளாக ஒளிபரப்பாகி இருக்கிறது. இதை தொடர்ந்து தொடரில் அடுத்து என்ன நடக்கும், கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா என்ன செய்யப்போகிறார்கள் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர்.

TN Job “FB  Group” Join Now

இந்த நிலையில், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மீண்டுமாக மூர்த்தி குடும்பத்துடன் இணைந்துள்ளனர். இதன் மூலம் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஏற்றுக் கொள்ளும் அடுத்தகட்ட கதைக்களம் ஒளிபரப்பாகும் என தெரிகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!