எடப்பாடி தொகுதியில் பழனிசாமி 3325 வாக்குகள் முன்னிலை – திமுக வேட்பாளர் பின்னடைவு!!!
தமிழக சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி அவர்கள் தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிவில் முன்னிலை பெற்றுள்ளார்.
எடப்பாடி தொகுதி முன்னிலை நிலவரம்:
தமிழக சட்டமன்ற தேர்தல் நடப்பு ஆண்டில் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு நடைபெற்ற பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது. நடந்து முடிந்த வாக்குப்பதிவுகளை இன்று எண்ணும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டியில் டி.டி.வி தினகரன் முன்னிலை – தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிவு!!
வாக்கு எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணி அளவில் தமிழக தலைமை தேர்தல் ஆணையரின் அறிவுறுத்தலின் படி தொடங்கப்பட்டது. முதலில் அனைத்து தொகுதிகளிலும் பெறப்பட்ட தபால் வாக்குகளை எண்ணுவதற்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. நடப்பு ஆண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு மொத்தம் 5,64,253 தபால் வாக்குகள் பெறப்பட்டது.
தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டார். இதனால் அந்த தொகுதியின் மீது பலத்த எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. இங்கு இவரை எதிர்த்து திமுக வேட்பாளர் சம்பத் குமார் போட்டியிட்டிருந்தார். மொத்தம் 5484 தபால் வாக்குகளை பழனிசாமியும், 2159 தபால் வாக்குகள் திமுக வேட்பாளரும் பெற்றுள்ளனர். அதன்படி, 3325 வாக்குகள் அதிகம் பெற்று முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்