கார் விபத்தில் சிக்கிக் கொண்ட ‘பாக்கியலட்சுமி’ ஜெனி – அவரே வெளியிட்ட பதிவு! நடந்தது என்ன?
பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜெனி மற்றும் செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கம்பம் மீனா, மிளா மூவரும் ஒரு கார் விபத்தில் சிக்கியுள்ளனர். தற்போது அந்த விபத்து குறித்து ஜெனி ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இது மட்டுமல்லாமல் விஜய் தொலைக்காட்சி சீரியல் மூலமாக நடிகர்கள் மற்றும் நடிகைகளுமே ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகிவிடுகின்றனர். திரையுலகில் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் அளவுக்கு சீரியல் நடிகர்களுக்கும் எக்கச்சக்கமான ரசிகர் கூட்டமே உள்ளது. அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியல் மூலமாக பிரபலமானவர் தான் திவ்யா கணேஷ். இவர் பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி கதாபாத்திரத்தில் செழியனுக்கு மனைவியாக நடித்து வருகிறார்.
ExamsDaily Mobile App Download
கடந்த சில நாட்களுக்கு முன்பாக திவ்யா கணேஷ் ஒரு விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார். அது பற்றி திவ்யா கணேஷ் தற்போது ஒரு பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது திவ்யாவின் நெருங்கிய தோழியான மிளா மற்றும் பாக்கியலட்சுமி தொடரில் செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வரும் மீனாவும் அந்த விபத்தில் சிக்கியுள்ளனர். சுருளியில் நடைபெற்ற ஒரு போட்டோஷூட்க்காக மூவரும் காரில் சென்றிருக்கின்றனர்.
முடிவுக்கு வந்த விஜய் டிவியின் “செந்தூரப்பூவே” சீரியல் – வைரலாகும் இறுதி நாள் வீடியோ!
அப்போது எதிர்பாராத விதமாக இவர்களின் கார் மீது பின்னால் வந்து கொண்டிருந்த வேறொரு கார் செயல்பாட்டை இழந்த காரணத்தினால் மோதியிருக்கிறார். இதனால் காரின் பின்பகுதி முழுவதுமே சேதமடைந்துள்ளார். மிளாவுக்கு மட்டும் முதுகில் அடிபட்டிருக்கிறது. மீத இருவருமே விபத்தில் இருந்து தப்பியுள்ளனர். இது குறித்து திவ்யா கணேஷ் தற்போது கடவுள் புண்ணியத்தால் தான் மூவரும் உயிர் பிழைத்தோம். தற்போது மூவரும் நலமாக இருக்கிறோம், யாரும் கவலைப்படத் தேவையில்லை என ரசிகர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.