முடிவுக்கு வந்த விஜய் டிவியின் “செந்தூரப்பூவே” சீரியல் – வைரலாகும் இறுதி நாள் வீடியோ!
விஜய் டிவி சீரியல்கள் என்றாலே புதுமைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் நிலையில், முன்னணி சீரியல்களில் ஒன்றான “செந்தூர பூவே” சீரியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இறுதி நாள் படப்பிடிப்பு வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.
செந்தூர பூவே:
தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் இருந்தாலும் ஒரு சில தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் அடித்து இருக்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் பல டாப் சீரியல்கள் இருந்தாலும் சினிமா படங்களை பெயராக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு மவுசு குறையாமல் இருக்கிறது. அந்த வகையில் திரில்லர் கலந்து புதுவித கதையுடன் முன்னணி நட்சத்திரங்களுடன் ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் ” செந்தூர பூவே”.
ExamsDaily Mobile App Download
குடும்பக் கதையை வைத்து தொடங்கப்பட்ட இந்த சீரியலின் நடுவே சில அமானுஷ்ய காட்சிகளும் வந்தது. அதன் பின் கணவன் மனைவி பாசத்தை காட்டிய இந்த சீரியலில் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். ந்த சீரியலில் ஹீரோவாக நடிகர் ரஞ்சித் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி நடிக்கிறார். சிறப்பு ரோலில் நடிகை ப்ரியா ராமன் நடித்து வந்தார். 300 எபிசோட்களை தாண்டியுள்ள இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
அதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சீரியலுக்கு பதிலாக புதிதாக ஒரு சீரியல் வர இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர். பிரபல நடிகர் ரஞ்சித் சீரியலில் முதன்முறையாக என்ட்ரி கொடுத்து இருக்கிறார். சீக்கிரமாக இந்த சீரியல் முடியவடைய இருப்பதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்து இருக்கின்றனர். பல சுவாரஸ்யமான காட்சிகள் வைக்கப்பட்ட நிலையில் இந்த சீரியலின் இறுதி படப்பிடிப்பு நாள் அன்று எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.