ராதிகாவுக்கு ஆறுதல் சொல்ல வந்த பாக்கியா, ராதிகாவின் முடிவு என்ன? “பாக்கியலட்சுமி” சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகாவுக்கு கோபியின் மனைவி தான் பாக்கியா என்ற உண்மை தெரிந்துள்ளது. அதனால் கோபியை இனிமேல் வீட்டிற்கு வர வேண்டாம் என வெளியே தள்ளிவிடுகிறார். இந்நிலையில் பாக்கியா ராதிகாவை சந்தித்து பேச இது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் எல்லாரும் எதிர்பார்த்த திருப்பங்கள் வெளியே வந்துள்ளது. அதனால் சீரியல் TRPயில் பெரிய மாற்றம் வந்துள்ளது. கோபி எப்போது சிக்குவார் என தமிழக மக்களின் ஆசை தற்போது நடந்துள்ளது. மூர்த்தி தனம் சொன்னதை அடுத்து ராதிகா கோபியின் குடும்பத்தை பார்க்க வேண்டும் என சொல்ல கோபி பல காரணங்களை சொல்லி முடியாது என சொல்கிறார். ஆனால் ராதிகா குடும்பத்தை பார்க்காமல் இருக்கமாட்டேன் என பிடிவாதம் பிடிக்க அப்போது கோபி குடித்துவிட்டு வந்து பாக்கியா தான் என்னுடைய மனைவி என்ற உண்மையை சொல்கிறார்.
Exams Daily Mobile App Download
உண்மையை தெரிந்து கொண்ட ராதிகா மிகவும் மனம் வருத்தப்படுகிறார். தனக்கு பல விதங்களில் நல்லது நினைக்கும் குடும்பத்தை ஏமாற்றியதை நினைத்து வருத்தப்படுகிறார். மறுநாள் எதுவும் ஞாபகம் இல்லாமல் கோபி ராதிகா வீட்டிற்கு செல்ல அங்கே ராதிகா இனிமேல் உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என சொல்லி வெளியே போக சொல்கிறார். அப்போது பாக்கியா ராதிகாவை பார்க்க வீட்டிற்கு வருகிறார். மயூரா சோகமாக இருப்பதை பார்த்து ஆறுதல் சொல்லி சிரிக்க வைக்கிறார்.
கமலின் விக்ரம் திரைப்படம் எப்படி இருக்கு? – ரசிகர்கள் கொண்டாட்டம்!
பின் ராதிகாவிடம் என்ன பிரச்சனை என கேட்க, என்னை திருமணம் செய்ய இருந்தவர் என்னை ஏமாற்றிவிட்டார். அவருடைய குடும்பத்தை பற்றி சொன்னது எல்லாம் பொய் என சொல்ல, அது எப்படி உங்களுக்கு தெரியும் என பாக்கியா கேட்கிறார். அவரே சொன்னார் என சொல்ல, அவரே உண்மையை சொன்னார் என்றால் அவர் நல்லவராக தான் இருக்க முடியும், நீங்க அவரை திருமணம் செய்து சந்தோசமாக இருக்க வேண்டும் அது தான் என்னுடைய ஆசை என பாக்கியா ஆறுதல் சொல்ல, ஆனால் உங்க வாழ்க்கையை கெடுக்க போகிறேன் என சொல்ல முடியாமல் ராதிகா தவிக்கிறார். இது குறித்து ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.