கோபியை வீட்டை விட்டு போக சொல்லும் பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பம் – “பாக்கியலட்சுமி” அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பல அதிரடி திருப்பங்களுடன் கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை கோபி தான் பாக்கியாவை பிரிய வேண்டும் என நினைக்க, ஆனால் தற்போது பாக்கியா கோபியை பிரிய முடிவு செய்கிறார். இந்நிலையில் வீட்டில் யார் குடும்பத்துடன் இருக்க போகிறார் என்பது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் கதைக்களம் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை அப்பாவியாக காட்டப்பட்ட பாக்கியா இனி சிங்கபெண்ணாக கிளம்பி இருக்கிறார். இனி கோபியே பாக்கியாவை ஏற்றுக் கொண்டாலும் பாக்கியா கோபியுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை. அதனால் கோபிக்கு முன்னதாக கோர்ட்டிற்கு சென்று விவாகரத்து கேட்கிறார். நீதிபதியும் பாக்கியா மீது உள்ள நியாயத்தை தெரிந்து கொண்டு விவாகரத்து கொடுக்கிறார்.
Exams Daily Mobile App Download
அதனால் கோவப்பட்ட கோபி பாக்கியாவை சரமாரியாக திட்டுகிறார். ஆனால் பாக்கியா அவருக்கு பதில் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். மறுபக்கம் ராதிகாவை ஈஸ்வரி திட்டி சாபம் கொடுத்ததால் அவருடைய மனம் மாறிவிடுகிறது. ஆனாலும் கோபியை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் ராதிகா இரு மனதாக இருக்கிறார். அந்த நேரம் கோபி வீட்டிற்கு வந்து ராதிகாவிடம் எனக்கும் பாக்கியாவிற்கும் இடையே விவாகரத்து ஆகிவிட்டது என சொல்கிறார்.
தமிழக வாகன ஓட்டிகள் கவனத்திற்கு – போக்குவரத்தில் மாற்றங்கள்
இனி எந்த பிரச்சனையும் இல்லை என்பதால் ராதிகாவை திருமணம் செய்து வாழ வேண்டும் என கோபி நினைக்கிறார். இதற்கிடையே இனியா அம்மா அப்பாவிற்கு விவாகரத்து கிடைத்தால் இந்த வீட்டில் யார் இருப்பார் என கேள்வி கேட்கிறார். சிங்கபெண்ணாக மாறிய பாக்கியா இனி இந்த வீட்டில் நான் தான் இருப்பேன் என சொல்ல, கோபியை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். குடும்பத்தினரும் பாக்கியாவின் முடிவை கேட்டு அதிர்ச்சி அடைகின்றனர். அதன் பின் கோபி ராதிகாவிடம் அடைக்கலம் தேடுகிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.